search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சங்கரன்கோவில் அருகே பெண் மீது தாக்குதல்- வாலிபர் கைது
    X

    சங்கரன்கோவில் அருகே பெண் மீது தாக்குதல்- வாலிபர் கைது

    சங்கரன்கோவில் அருகே மகள் காணாமல் போனது குறித்து போலீஸ் நிலையத்தில் தாய் புகார் கொடுத்தார். இதை வாபஸ் வாங்க கோரி அப்பெண்ணை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள ஈச்சந்தா கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் மனைவி பொன்னுத்தாய் (வயது 45). சம்பவத்தன்று இவரின் மகள் காணாமல் போனது சம்பந்தமாக அதே ஊரை சேர்ந்த கார்த்திக் என்பவரின் மீது போலீசில் புகார் செய்திருந்தாராம். 

    இந்நிலையில் வெளியூர் சென்று விட்டு ஊருக்குள் வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த மாடசாமி (26) என்பவர் பொன்னுத்தாயிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது மாடசாமி தனது உறவினர் கார்த்திக் மீது கொடுத்த புகாரை வாபஸ் வாங்க கூறியுள்ளார். 

     இதற்கு பொன்னுத்தாய் மறுத்து விட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த மாடசாமி பொன்னுதாயை அவதூறாக பேசி அடித்து உதைத்து விட்டு தப்பி சென்றுவிட்டார். 

    இதுகுறித்து சின்னகோவிலான்குளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாடசாமியை கைது செய்தனர். 
    Next Story
    ×