search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லையப்பர் கோவிலில் நவக்கிரக சன்னதியில் சேதமான சாமி சிலை - பக்தர்கள் அதிர்ச்சி
    X

    நெல்லையப்பர் கோவிலில் நவக்கிரக சன்னதியில் சேதமான சாமி சிலை - பக்தர்கள் அதிர்ச்சி

    நெல்லையப்பர் கோவிலில் உடைந்த சாமி சிலையை வைத்து வழிபாடு நடத்தியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    நெல்லை:

    நெல்லையப்பர் கோவிலில் கொடிமரத்தின் வலப்புறமாக நவக்கிரக சன்னதி உள்ளது. இங்குள்ள சந்திரன் சிலையின் கை பகுதி சேதமடைந்து காணப்படுகிறது. கடந்த ஏப்ரல் 27-ந்தேதி கும்பாபிசேகத்தின்போது இந்த சிலை சேதமாகியிருக்கலாம் என தெரிகிறது.

    சிலை சேதமடைந்த நிலையில் இருப்பதை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனால் கோவில் அர்ச்சகர்கள் சேதமான கை பகுதி வெளியில் தெரியாத வகையில் பூ வைத்து அலங்காரம் செய்கின்றனர்.

    உடைந்த சிலையை கும்பாபிஷேகத்திற்கு முன்பாக சீரமைத்திருக்க வேண்டும், சேதமடைந்த சிலையுடன் வழிபாடு தொடர்வது முறையானது அல்ல என பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த சந்திரன் சிலை 2004-ம் ஆண்டுக்கு முன்பே உடைந்துவிட்டதாகவும், கும்பாபிசேகத்தின்போது மற்ற பணிகள் இருந்ததால் கவனிக்கவில்லை எனவும் கோவில் பணியாளர்கள் கூறுகின்றனர். எனினும் சேதமடைந்த சிலையுடன் வழிபாடு செய்வது தெய்வகுற்றம் என பக்தர்கள் குறை கூறியுள்ளனர்.

    எனவே புதிய சிலையை வரவழைத்து அதற்கு உரிய பூஜைகள் நடத்தி வழிபாட்டுக்கு வைக்கவேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.
    Next Story
    ×