search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவெறும்பூரில் பெல் ஊழியர்கள் வீடுகளில் திருடிய 2 பேர் கைது
    X

    திருவெறும்பூரில் பெல் ஊழியர்கள் வீடுகளில் திருடிய 2 பேர் கைது

    திருவெறும்பூரில் பெல் ஊழியர்கள் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 18 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
    திருவெறும்பூர்:

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள எழில்நகர் குறிஞ்சி தெருவை சேர்ந்தவர் முருகன்( வயது 43). பெல் ஊழியர். கடந்த 16-ந்தேதி அதிகாலை இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் வீட்டு பீரோவில் இருந்த நகைகள் மற்றும் கொழுசுகளை எடுத்தனர்.  

    அப்போது சத்தம் கேட்டு எழுந்து வந்த முருகனின் மனைவி வாணியின் முகத்தில் துணியை வைத்து அழுத்தி விட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலிசெயினை பறித்தனர். பின்னர் 18 பவுன் நகை, மற்றும் வெள்ளி கொழுசுகளுடன் கொள்ளையர்கள் தப்பி சென்று விட்டனர்.

    இதேபோல் பக்கத்து வீட்டை சேர்ந்த பெல் ஊழியரான டென்சிலின் வீட்டு பூட்டையும் உடைத்து பீரோவில் இருந்த ரூ. 10 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர் இச்சம்பவம் குறித்து முருகன் மற்றும் டென்சிலின் ஆகியோர் திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர் . அதன் பேரில் திருவெறும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். 

    இந்த நிலையில் திருவெறும்பூர் பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றி கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர். அவர்களிடம் திருவெறும்பூர் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை செய்தபோது வடக்கு துவாக்குடி வடக்கு மலை கருமாரியம்மன் கோவிலை சேர்ந்த சோலை மகன் பிரபு(26), அவரது நண்பர் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த பசிம் பாலன் மகன் ராஜா(32) என்பதும், இருவரும் முருகன் மற்றும் டென்சிலின் வீட்டில் கொள்ளையடித்ததும் தெரியவந்தது. 

    இதையடுத்து 2 பேரையும் போலீசார்  கைது செய்து திருச்சி 6 வது குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து 18 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×