search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட் நிர்வாக பணிகளுக்கு பசுமை தீர்ப்பாயம் அனுமதி - முதல்வர் ஆலோசனை
    X

    ஸ்டெர்லைட் நிர்வாக பணிகளுக்கு பசுமை தீர்ப்பாயம் அனுமதி - முதல்வர் ஆலோசனை

    ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ள நிலையில், இது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். #Sterlite
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து, ஆலையை மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. தமிழக அரசின் அரசாணைக்கு எதிராக ஸ்டெர்லைட் நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்த போது, ஆலையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. 

    இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனைக்கூட்டம் நடந்தது. அதில், இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×