search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணமேல்குடி அருகே பஸ் மோதி தபால் நிலைய உதவியாளர் பலி
    X

    மணமேல்குடி அருகே பஸ் மோதி தபால் நிலைய உதவியாளர் பலி

    தபால் நிலைய உதவியாளர் மீது பஸ் மோதி விபத்துக்குள்ளாதில் சிகிச் பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
    மணமேல்குடி:

    மணமேல்குடி தபால் நிலையத்தில் உதவியாளராக வேலை பார்த்தவர் ராமு (வயது 57). இவர் சம்பவத்தன்று தபால்களை பஸ்சில் அனுப்புவதற்காக பஸ் நிலையம் வந்தார். பின்னர் அங்கிருந்த ஒரு பஸ்சில் தபால்பைகளை ஏற்றிக்கொண்டிருந்தார். இதை அறியாமல் அப்போது அந்த பஸ்சின் டிரைவர் பஸ்சை இயக்கினார். இதனால் ராமுவின் மீது அந்த பஸ் மோதியதில், அவரது கால் முறிந்தது. இதனால் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ராமு பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து மணமேல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×