என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இண்டூர் அருகே லாரி டிரைவர் தற்கொலை
Byமாலை மலர்10 Aug 2018 7:44 AM GMT (Updated: 10 Aug 2018 7:44 AM GMT)
இண்டூர் அருகே லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #suicide
இண்டூர்:
தருமபுரி மாவட்டம், இண்டூர் அடுத்த நடப்பன அள்ளி பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 25). இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி வெற்றி செல்வி (20). இவர் 8 மாத நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.
விக்னேசுக்கு மதுக் குடிக்கும் பழக்கம் உள்ளதால் அடிக்கடி வீட்டில் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை வீட்டிற்கு விக்னேஷ் மது குடித்து விட்டு வந்தார். இதற்கு வெற்றிசெல்வி இப்படி தினமும் மது குடித்து விட்டு வந்தால் எப்படி குடும்பம் நடத்துவது என்று கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனவேதனையில் விக்னேஷ் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து இண்டூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம், இண்டூர் அடுத்த நடப்பன அள்ளி பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 25). இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி வெற்றி செல்வி (20). இவர் 8 மாத நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.
விக்னேசுக்கு மதுக் குடிக்கும் பழக்கம் உள்ளதால் அடிக்கடி வீட்டில் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை வீட்டிற்கு விக்னேஷ் மது குடித்து விட்டு வந்தார். இதற்கு வெற்றிசெல்வி இப்படி தினமும் மது குடித்து விட்டு வந்தால் எப்படி குடும்பம் நடத்துவது என்று கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனவேதனையில் விக்னேஷ் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து இண்டூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X