என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விருதுநகர் அருகே தொழிற்சாலை தீ விபத்தில் தொழிலாளி உடல் கருகி பலி
Byமாலை மலர்8 Aug 2018 9:34 AM GMT (Updated: 8 Aug 2018 9:34 AM GMT)
விருதுநகர் அருகே அலுமினிய பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி உடல் கருகி பலியானார்.
விருதுநகர்:
சிவகாசியை சேர்ந்தவர் அருண்சங்கர். இவர் விருதுநகர் அருகே மேலஆமத்தூரில் அலுமினிய பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இங்கு நத்திரெட்டியபட்டியை சேர்ந்த கண்ணன் (வயது27) என்பவர் பணியாற்றி வந்தார்.
நேற்று இரவு கண்ணன் ஆலையிலேயே ஒரு அறையில் தூங்கினார். இன்று அதிகாலை அவர் தங்கி இருந்த அறையில் இருந்து கரும்புகை வெளியே வந்தது.
இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே சிவகாசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.அவர்கள் வருவதற்குள் அந்த அறையில் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதில் உள்ளே இருந்த கண்ணன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். பின்னர் தொழிலாளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கண்ணன் தூங்கி கொண்டிருந்த அறையில் அலுமினிய பவுடர் இருந்த தால் தீ வேகமாக பரவி இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
சிவகாசியை சேர்ந்தவர் அருண்சங்கர். இவர் விருதுநகர் அருகே மேலஆமத்தூரில் அலுமினிய பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இங்கு நத்திரெட்டியபட்டியை சேர்ந்த கண்ணன் (வயது27) என்பவர் பணியாற்றி வந்தார்.
நேற்று இரவு கண்ணன் ஆலையிலேயே ஒரு அறையில் தூங்கினார். இன்று அதிகாலை அவர் தங்கி இருந்த அறையில் இருந்து கரும்புகை வெளியே வந்தது.
இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே சிவகாசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.அவர்கள் வருவதற்குள் அந்த அறையில் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதில் உள்ளே இருந்த கண்ணன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். பின்னர் தொழிலாளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கண்ணன் தூங்கி கொண்டிருந்த அறையில் அலுமினிய பவுடர் இருந்த தால் தீ வேகமாக பரவி இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X