search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாரிமுனையில் செல்போன் பறித்த கொள்ளையர்களை மடக்கி பிடித்த போலீசார்
    X

    பாரிமுனையில் செல்போன் பறித்த கொள்ளையர்களை மடக்கி பிடித்த போலீசார்

    பாரிமுனையில் செல்போன் பறித்த கொள்ளையர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை தி.நகர் ராஜா பிள்ளை கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் மின்ட் தெரு பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவர் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். அவர் திருடன் திருடன் என்று கூச்சல் போட்டுக் கொண்டே அவர்களை துரத்தினர். பாரிமுனையில் உள்ள சென்னை மருத்துவ கல்லூரி அருகே சென்றபோது பூக்கடை போலீசார் பொதுமக்கள் உதவியுடன் கொள்ளையர்களை விரட்டினார்கள்.

    அப்போது ஒருவன் சென்னை அரசு பொது மருத்துவமனைக்குள் தப்பி ஓடினான். அவனை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவனது பெயர் சந்தோஷ்குமார் என்றும், புளியந்தோப்பு வ.உ.சி. நகரைச் சேர்ந்தவன் என்பதும் தெரிய வந்தது. அவனிடம் விசாரணை நடத்தியதன் அடிப்படையில் மற்றொரு கொள்ளையனை புளியந்தோப்பு வ.உ.சி. நகரைச் சேர்ந்த அபிமன்யு என்பவனை கைது செய்தனர்

    அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தப்பி ஓடிய அரவிந்த் என்பவரை பூக்கடை போலீசார் தேடி வருகிறார்கள்.

    போரூர் அருகே உள்ள காரம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். நேற்று மதியம் அவர் வீட்டின் அருகே உள்ள சாலையில் நடந்து சென்றார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபர் கார்த்திகேயனிடம் இருந்த செல்போனை பறித்து தப்பி செல்ல முயன்றான்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் செல்போன் பறித்த வாலிபரை மடக்கி பிடித்து வளசரவாக்கம் போலீசில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் அமுதா அவனிடம் விசாரணை நடத்தினார்.

    அவன் குன்றத்தூர் பெரியார் நகரைச் சேர்ந்த அருண்குமார் என்ற பச்சை என்பதும் ஏற்கனவே பல முறை சிறை சென்றவர் என்பதும் தெரிய வந்தது. ஒரு வழப்பறி வழக்கில் கைதாகி நிபந்தனை ஜாமீனில் வந்த பச்சை குன்றத்தூர் போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்தான்.

    அவன் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி சென்ற போது மீண்டும் வழிப்பறியில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவனிடமிருந்து கத்தி மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். #Tamilnews

    Next Story
    ×