search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாரண்யத்தில் வடமாநில வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    வேதாரண்யத்தில் வடமாநில வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

    வேதாரண்யத்தில் வடமாநில வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Suicidecase

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் திருத்துறைப்பூண்டி சாலையில் எலெக்டிரிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்திருப்பவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (வயது 45). இவர் உறவினர் மகன்கள் பாவர்லால் (22), அவரது தம்பிகள் பரத், திலிப் மற்றும் உறவினர்களுடன் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று காலை பாவர்லால் அறை கதவு திறக்கப் படாததால் கதவை திறந்து பார்த்தபோது அந்த அறையில் தூக்குபோட்டு பாவர்லால் இறந்து கிடந்தார். இது குறித்து ராஜேஷ்குமார் வேதாரண்யம் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் முருகவேலு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×