search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாரிகள் வேலை நிறுத்தம்- ஈரோடு மாட்டுசந்தை வெறிச் சோடியது
    X

    லாரிகள் வேலை நிறுத்தம்- ஈரோடு மாட்டுசந்தை வெறிச் சோடியது

    லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக ஈரோட்டில் பிரதான தொழில்கள் அனைத்தும் முடங்கிப் போய் வருகிறது. குறிப்பாக ஈரோடு மாட்டுசந்தையும் வெறிச்சோடி காணப்பட்டது.

    ஈரோடு:

    பெட்ரோல் டீசல் விலையை 3 மாதத்திற்கு ஒரு முறை நிர்ணயம் செய்ய வேண்டும் சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும். பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 20-ந் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் அகில இந்திய அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஈரோடு மாவட்டத்தில் 5 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை இதனால் சுமார் ரூ. 350 கோடி வரை வர்த்தகம் முடங்கியுள்ளது. புடவை துணிமணிகள் வெளிமாநிலங்களுக்கு செல்ல முடியாமல் லாரி புக்கிங் ஆபீஸ் மற்றும் குடோன்களில் தேக்கம் அடைந்து வருகின்றன.

    லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக ஈரோட்டில் பிரதான தொழில்கள் அனைத்தும் முடங்கிப் போய் வருகிறது. குறிப்பாக ஜவுளிகள் மஞ்சள் எண்ணெய் வித்துக்கள் காய்கறிகள் போன்ற தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வரிசையில் தற்போது கருங்கல்பாளையத்தில் நடந்த மாட்டு சந்தையும் இணைந்துள்ளது.

    ஈரோடு கருங்கல் பாளையத்தில் ஒவ்வொரு வியாழன் தோறும் மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம்.

    இந்த சந்தைக்கு வெளிமாநிலங்களில் இருந்து அதிக அளவு வியாபாரிகள் வருவார்கள் குறிப்பாக மகாராஷ்டிரா குஜராத் ,கேரளா, மேற்கு வங்காளம் ,கோவா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவு வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கி செல்வார்கள்.

    இந்நிலையில் லாரிகள் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக இன்று நடந்த மாட்டுச்சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை. இதனால் மாட்டுச்சந்தை களை இழந்து காணப்பட்டது. வியாபாரமும் பாதிக்கு பாதியாக குறைந்தது.

    இன்று 200 பசு மாடுகளும் 100 எருமை மாடுகளும் 200 வளர்ப்பு கன்றுகளும் விற்பனைக்கு வந்தன. அவை 16 ஆயிரம் முதல் 34 ஆயி ரம் வரை விற்பனையானது.

    இது குறித்து மாட்டு சந்தை மேலாளர் முருகன் கூறியதாவது.-

    கடந்த 2 வாரமாகவே மழை காரணமாக வெளி மாநில வியாபாரிகள் அதிகம் வரவில்லை. இந்நிலையில் லாரி உரிமையாளர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்தம் காரணமாக. இன்று சந்தைக்கு குஜராத், கர்நாடகா, குஜராத், மேற்குவங்காளம் வியாபாரிகள் யாரும் வரவில்லை.

    ரூ.3 கோடி வரை மாட்டு சந்தையில் விற்பனை நடக்கும் .ஆனால் இன்று ரூ.1 கோடிக்கு மட்டுமே மாடுகள் விற்பனை ஆனது ரூ.2 கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×