search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூர் அருகே கார் கண்ணாடியை உடைத்து ரூ.1¾ லட்சம் திருட்டு
    X

    பெரம்பலூர் அருகே கார் கண்ணாடியை உடைத்து ரூ.1¾ லட்சம் திருட்டு

    பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே வணி வளாகத்தில் நிறுத்தப்பட்ட கார் கண்ணாடியை உடைத்து ரூ.1 லட்சத்து 77 ஆயிரம் பணத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். #CashTheft
    பெரம்பலூர்:

    பெரம்பலூர்-எளம்பலூர் சாலையில் உள்ள முத்துநகர் கிழக்கு முதல் தெருவை சேர்ந்தவர் ஜவஹர் (வயது 43). இவர் எல்.ஐ.சி. நிறுவனத்தில் முதன்மை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினருடன் காரில் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்துக்கு சென்றார்.

    அப்போது ஒரு வணிக வளாகம் முன்பு காரை நிறுத்தி விட்டு பொருட்கள் வாங்க சென்றார். பின்னர் ஜவஹர் திரும்பி வந்து பார்த்த போது காரின் பின்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதையடுத்து காரின் கதவை திறந்து பார்த்த போது, உள்ளே ரூ.1 லட்சத்து 77 ஆயிரம், ஏ.டி.எம்., கிரேடிட் அட்டைகள் இருந்த பேக் திருடு போயிருந்தது. மர்மநபர்கள் காரின் கண்ணாடியை உடைத்து பணம் உள்ளிட்டவை இருந்த பேக்கை திருடி சென்றது தெரியவந்தது.

    இது குறித்து ஜவஹர் உடனடியாக பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.1 லட்சத்து 77 ஆயிரத்தை திருடியது தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வணிக வளாகம் முன்பு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்த்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 
    Next Story
    ×