search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமானூர் அருகே மணல் கடத்திய வாகனங்கள் பறிமுதல்: 3 பேர் கைது
    X

    திருமானூர் அருகே மணல் கடத்திய வாகனங்கள் பறிமுதல்: 3 பேர் கைது

    திருமானூர் அருகே கொள்ளிடம் ஆற்றிலிருந்து அனுமதியின்றி மணல் கடத்திய பொக்லைன் எந்திரம், 2 லாரிகளை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள விழுப்பனங்குறிச்சி பகுதியில் திருமானூர் சப்-இன்ஸ் பெக்டர் மேனகா தலைமையிலான போலீசார் சம்பதன்று  இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது,  மணல்குவாரி  செயல்பட்டு வந்த பாதையின்  வழியாக மணல் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்று பார்த்த போது பொக்லைன் இயந்திரம்  கொண்டு, 2 லாரிகளில் மணல் ஏற்றிக் கொண்டிருப்பது தெரியவந்தது.

    இதனையடுத்து, பொக்லைன் இயந்திரம், 2 லாரிகள், அதன் டிரைவர்கள் வெற்றியூர் ராஜசேகர், விழுப்பனங்குறிச்சி பிரபாகரன்(26), கார்த்திகேயன்(34) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×