என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பத்தூர் அருகே மாற்றுத்திறனாளி சிறுமியை கற்பழித்து கொன்றவர் கைது
Byமாலை மலர்11 July 2018 11:21 AM GMT (Updated: 11 July 2018 11:21 AM GMT)
திருப்பத்தூர் அருகே மாற்றுத்திறனாளி சிறுமியை கற்பழித்துக் கொலை செய்ததாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் கீழச்சீவல்பட்டி அருகே உள்ளது அச்சரம்பட்டி. இங்கு வாய் பேச முடியாத 17 வயது மாற்றுத்திறனாளி சிறுமி பெற்றோருடன் வசித்து வந்தார்.
தாய்-தந்தை வேலைக்கு சென்று விட்ட நிலையில் சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதனை அறிந்த யாரோ மர்ம நபர் வீட்டினுள் நுழைந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பின்னர் சிறுமி அடையாளம் காட்டி விடுவார் என பயந்து தலையில் பயங்கர ஆயுதத்தால் அடித்துக்கொலை செய்து உடலை வீட்டின் பின்புறம் உள்ள மரங்கள் அடர்ந்த புதருக்குள் வீசி விட்டு தப்பியோடி விட்டார்.
இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. மோப்ப நாய் லிங்காவும் வரவழைக்கப்பட்டது.
சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்து ஓடிய லிங்கா 100 மீட்டர் தூரத்தில் உள்ள பழனிசாமி வீட்டு முன்பு நின்றது.
அந்த வீட்டில் இருந்த பழனிச்சாமியின் மகன் மாணிக்கம் (27) என்பவரை பிடித்து விசாரித்த போது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த போலீசார் வேறு யாருக்கும் தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் கீழச்சீவல்பட்டி அருகே உள்ளது அச்சரம்பட்டி. இங்கு வாய் பேச முடியாத 17 வயது மாற்றுத்திறனாளி சிறுமி பெற்றோருடன் வசித்து வந்தார்.
தாய்-தந்தை வேலைக்கு சென்று விட்ட நிலையில் சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதனை அறிந்த யாரோ மர்ம நபர் வீட்டினுள் நுழைந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பின்னர் சிறுமி அடையாளம் காட்டி விடுவார் என பயந்து தலையில் பயங்கர ஆயுதத்தால் அடித்துக்கொலை செய்து உடலை வீட்டின் பின்புறம் உள்ள மரங்கள் அடர்ந்த புதருக்குள் வீசி விட்டு தப்பியோடி விட்டார்.
இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. மோப்ப நாய் லிங்காவும் வரவழைக்கப்பட்டது.
சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்து ஓடிய லிங்கா 100 மீட்டர் தூரத்தில் உள்ள பழனிசாமி வீட்டு முன்பு நின்றது.
அந்த வீட்டில் இருந்த பழனிச்சாமியின் மகன் மாணிக்கம் (27) என்பவரை பிடித்து விசாரித்த போது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த போலீசார் வேறு யாருக்கும் தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X