search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruppathur girl molested"

    திருப்பத்தூர் அருகே மாற்றுத்திறனாளி சிறுமியை கற்பழித்துக் கொலை செய்ததாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் கீழச்சீவல்பட்டி அருகே உள்ளது அச்சரம்பட்டி. இங்கு வாய் பேச முடியாத 17 வயது மாற்றுத்திறனாளி சிறுமி பெற்றோருடன் வசித்து வந்தார்.

    தாய்-தந்தை வேலைக்கு சென்று விட்ட நிலையில் சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதனை அறிந்த யாரோ மர்ம நபர் வீட்டினுள் நுழைந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    பின்னர் சிறுமி அடையாளம் காட்டி விடுவார் என பயந்து தலையில் பயங்கர ஆயுதத்தால் அடித்துக்கொலை செய்து உடலை வீட்டின் பின்புறம் உள்ள மரங்கள் அடர்ந்த புதருக்குள் வீசி விட்டு தப்பியோடி விட்டார்.

    இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. மோப்ப நாய் லிங்காவும் வரவழைக்கப்பட்டது.

    சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்து ஓடிய லிங்கா 100 மீட்டர் தூரத்தில் உள்ள பழனிசாமி வீட்டு முன்பு நின்றது.

    அந்த வீட்டில் இருந்த பழனிச்சாமியின் மகன் மாணிக்கம் (27) என்பவரை பிடித்து விசாரித்த போது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த போலீசார் வேறு யாருக்கும் தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×