search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகை மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் - கலெக்டர் சுரேஷ்குமார் ஆய்வு
    X

    நாகை மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் - கலெக்டர் சுரேஷ்குமார் ஆய்வு

    நாகை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் சுரேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் தலைஞாயிறு, கீழையூர், கீழ்வேளூர் ஆகிய ஒன்றியங்களில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது செருதூர் - வேளாங்கண்ணி சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சுனாமி மறுவாழ்வு திட்டத்தின் கீழ் ரூ.15 கோடி மதிப்பீட்டில் வெள்ளையாற்றின் குறுக்கே கட்டி முடிக்கப்பட்ட பாலத்தையும், தலைஞாயிறு ஒன்றியம் வண்டல் அவுரிக்காடு சாலையில் நல்லாறு, அடப்பாறு, முள்ளியாற்றில் சுனாமி மறுவாழ்வு திட்டத்தின் கீழ் ரூ.11 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் இணைப்பு பாலம் கட்டும் பணிகளையும் பார்வையிட்டார்.

    மேலும், பொதுப்பணித்துறை சார்பில் அரிச்சந்திரா நதியின் குறுக்கே பிரிஞ்சிமூலை இயக்கு அணையை ஆசிய வளர்ச்சி வங்கி கடன் உதவித்திட்டம் மூலம் ரூ.2 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் புணரமைத்து மறுகட்டுமானம் செய்யும் பணிகளையும், கள்ளிமேடு கிராமத்தில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் வெண்ணாறு உபவடிநிலத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பீட்டில் கடைமடை நீரொழுங்கி கட்டுமான பணிகளையும் கலெக்டர் சுரேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்தும், தரமாகவும் முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் இளம்வழுதி, உதவி கோட்டப் பொறியாளர் சாலைகுகன், பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் கமலக்கண்ணன், பொதுப்பணித்துறை செயற்்பொறியாளர்கள் வேட்டைச்செல்வம், ஞானசேகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், தாசில்தார்கள் சங்கர், தையல்நாயகி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந் தனர். 
    Next Story
    ×