என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெட்ரோல், டீசல் விலை உயர்வு - மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்20 Jun 2018 9:24 AM GMT (Updated: 20 Jun 2018 9:24 AM GMT)
புதுவை மாநில இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கான மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து இன்று 15 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுச்சேரி:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகரக்குழு சார்பில் காந்திவீதி அமுத சுரபி எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் ஜீவானந்தம், துணை செயலாளர்கள் சிவ குருநாதன், பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், கலை இலக்கிய பெருமன்ற சிறப்பு தலைவர் ராமன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் நகர பொருளாளர் சுப்பிரமணி, மாநிலக்குழு தலைவர் இன்பமொழி தனசீலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதேபோல தட்டாஞ்சாவடி தொகுதி குழு சார்பில் பாக்குமுடையான்பட்டு ஜீவாநகர் சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தொகுதி செயலாளர் முருகன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர்கள் ஹேமலதா, எழிலன், பொருளாளர் தனஞ்செழியன், துணை செயலாளர் ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் சலீம், நிர்வாகக்குழு உறுப்பினர் சேதுசெல்வம் கண்டன உரையாற்றினர். 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
இதேபோல பாகூர், வில்லியனூர், மண்ணாடிப்பட்டு, அரியாங்குப்பம், காமராஜர் நகர், நெல்லித்தோப்பு, இந்திராநகர், உழவர்கரை மற்றும் காரைக்கால் என 15 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகரக்குழு சார்பில் காந்திவீதி அமுத சுரபி எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் ஜீவானந்தம், துணை செயலாளர்கள் சிவ குருநாதன், பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், கலை இலக்கிய பெருமன்ற சிறப்பு தலைவர் ராமன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் நகர பொருளாளர் சுப்பிரமணி, மாநிலக்குழு தலைவர் இன்பமொழி தனசீலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதேபோல தட்டாஞ்சாவடி தொகுதி குழு சார்பில் பாக்குமுடையான்பட்டு ஜீவாநகர் சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தொகுதி செயலாளர் முருகன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர்கள் ஹேமலதா, எழிலன், பொருளாளர் தனஞ்செழியன், துணை செயலாளர் ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் சலீம், நிர்வாகக்குழு உறுப்பினர் சேதுசெல்வம் கண்டன உரையாற்றினர். 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
இதேபோல பாகூர், வில்லியனூர், மண்ணாடிப்பட்டு, அரியாங்குப்பம், காமராஜர் நகர், நெல்லித்தோப்பு, இந்திராநகர், உழவர்கரை மற்றும் காரைக்கால் என 15 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X