search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய கூட்டுறவு வங்கி கிளையை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்து புதிய வங்கி கணக்கு புத்தகம் வழங்கிய காட்சி.
    X
    புதிய கூட்டுறவு வங்கி கிளையை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்து புதிய வங்கி கணக்கு புத்தகம் வழங்கிய காட்சி.

    கூட்டுறவு சங்கங்களில் முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை- அமைச்சர் எச்சரிக்கை

    கூட்டுறவு சங்கங்களில் முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார். #TNMminister#SellurRaju
    திருச்சி:

    திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் 63-வது கிளை கே.கே.நகர் தென்றல் நகரில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

    விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு, புதிய கிளையை தொடங்கி வைத்து குத்துவிளக்கேற்றினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. ஆட்சியில் இதுவரை 104 கூட்டுறவு வங்கி கிளைகள் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 23 மாவட்ட வங்கிகள் மற்றும் 848 கிளைகள் உள்ளது. வரலாறு காணாத அளவுக்கு ரூ.27ஆயிரத்து 750 கோடி கூட்டுறவு வங்கிகளில் பொதுமக்கள் டெபாசிட் செய்துள்ளனர். இதன் மூலம் நகைக்கடன், பயிர்க்கடன், வாகனக்கடன், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் என பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதனைபெற்று பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர்.


    நடப்பாண்டில் விவசாய கடனுக்கு ரூ.8ஆயிரம் கோடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒதுக்கியுள்ளார். கடன் வழங்குவது தொடர்பாக 8 டெல்டா மாவட்டங்களில் இன்று ஆய்வு செய்ய உள்ளேன். 8ஆயிரம் கோடியில் இதுவரை ரூ.500 கோடிக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. தங்கு தடையின்றி பாரபட்சமில்லாமல் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிதாக சேர்ந்த உறுப்பினருக்கு 30 சதவீதமும், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கும் கடன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முறைகேடுகளை தடுக்க விஜிலென்ஸ் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தி.மு.க. ஆட்சியில் நடந்தது போல் அல்லாமல் தற்போது முறைகேடுகள் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டுள்ளதோடு பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.

    சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை திட்டம் பற்றிய உண்மை நிலை மக்களுக்கு தெரியும். முதல்வரின் விளக்கத்தை கேட்டு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினே ஆதரவு தெரிவித்து விட்டார். சில சுயநலவாதிகள் தங்களை பிரபலபடுத்துவதற்காக அத்திட்டத்திற்கு எதிராக போராட்டத்தை தூண்டி விடுகின்றனர். தமிழகத்தின் வளர்ச்சி, தொழில் வளர்ச்சிக்கு 8 வழி பசுமை சாலை உறுதுணையாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMminister#SellurRaju
    Next Story
    ×