search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆரணி அருகே லாரி மோதி வாலிபர் பலி
    X

    ஆரணி அருகே லாரி மோதி வாலிபர் பலி

    ஆரணி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஆரணி, ஜூன்.18-

    ஆரணி அருகே உள்ள மேலானூர் கிராமத்தை சேர்ந்த குமரேசன் மகன் ராஜேஷ் (வயது25). கூலி தொழிலாளி. நேற்று சேத்துப்பட்டு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார்.

    விண்ணமங்கலம் என்ற இடத்தில் வந்தபோது எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜேஷ், ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் இறந்தார்.

    ஆரணி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×