search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுரண்டை பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
    X

    சுரண்டை பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

    சுரண்டை பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

    சுரண்டை:

    புளியங்குடி முத்துராமலிங்கம் 2-வது தெருவை சேர்ந்தவர் முகமது முஸ்தபா (எ) முஸ்தபா இவர் கடந்த ஏப்ரல் 23-ந் தேதி சுரண்டையில் கோலம் போட்டு கொண்டிருந்த பெண்ணிடம் செயினை பறிக்க முயன்ற போது பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது புளியங்குடி, சொக்கம்பட்டி, திசையன்விளை, வீ.கே புதூர் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் பரிந்துரையின் பேரில் கலெக்டர் ஷில்பா, முஸ்தபாவை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.

    இதையடுத்து சுரண்டை போலீசார் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

    Next Story
    ×