என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாலாஜா அருகே ஊதுவத்தி தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து
Byமாலை மலர்13 Jun 2018 4:35 PM GMT (Updated: 13 Jun 2018 4:35 PM GMT)
வாலாஜா அருகே ஊதுவத்தி தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
வாலாஜா:
வாலாஜாவிலிருந்து வன்னிவேடு மோட்டூர் கிராமத்திற்கு செல்லும் சாலையில் ஆற்காடு தெத்து தெரு உள்ளது. இங்கு கடந்த 20 வருடங்களாக ஊதுவத்தி தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் ஆண்கள், பெண்கள் என 150-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் ஊதுவத்திகள் பல்வேறு நகரங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.
நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பணி முடிந்து வீடுகளுக்கு சென்ற பின்னர் தொழிற்சாலை கதவுகள் மூடப்பட்டன. இந்த நிலையில் நேற்று காலை சுமார் 7½ மணியளவில் தொழிற்சாலையின் ஒரு பகுதியில் புகைமூட்டம் ஏற்பட்டது. ஒரு சில நிமிடங்களில் தீ பயங்கரமாக பற்றி பரவ தொடங்கியது.
இதைப் பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் உடனடியாக தொழிற்சாலை உரிமையாளருக்கும், ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்தினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து ராணிப்பேட்டை, சிப்காட், ஆற்காடு தீயணைப்பு நிலையங்களிலிருந்து தீயணைப்பு வாகனங்கள், வீரர்கள் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் விற்பனைக்கு தயார் செய்து வைக்கப்பட்டிருந்த ஊதுவத்திகள் மற்றும் தயாரிப்பு மூல பொருட்கள் என பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சாம்பல் ஆகின.
இது குறித்து வாலாஜா போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலாஜாவிலிருந்து வன்னிவேடு மோட்டூர் கிராமத்திற்கு செல்லும் சாலையில் ஆற்காடு தெத்து தெரு உள்ளது. இங்கு கடந்த 20 வருடங்களாக ஊதுவத்தி தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் ஆண்கள், பெண்கள் என 150-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் ஊதுவத்திகள் பல்வேறு நகரங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.
நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பணி முடிந்து வீடுகளுக்கு சென்ற பின்னர் தொழிற்சாலை கதவுகள் மூடப்பட்டன. இந்த நிலையில் நேற்று காலை சுமார் 7½ மணியளவில் தொழிற்சாலையின் ஒரு பகுதியில் புகைமூட்டம் ஏற்பட்டது. ஒரு சில நிமிடங்களில் தீ பயங்கரமாக பற்றி பரவ தொடங்கியது.
இதைப் பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் உடனடியாக தொழிற்சாலை உரிமையாளருக்கும், ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்தினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து ராணிப்பேட்டை, சிப்காட், ஆற்காடு தீயணைப்பு நிலையங்களிலிருந்து தீயணைப்பு வாகனங்கள், வீரர்கள் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் விற்பனைக்கு தயார் செய்து வைக்கப்பட்டிருந்த ஊதுவத்திகள் மற்றும் தயாரிப்பு மூல பொருட்கள் என பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சாம்பல் ஆகின.
இது குறித்து வாலாஜா போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X