search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூரில் கூட்டுறவு சங்க செயலாளர் வீட்டில் நகை கொள்ளை
    X

    பெரம்பலூரில் கூட்டுறவு சங்க செயலாளர் வீட்டில் நகை கொள்ளை

    பெரம்பலூரில் கூட்டுறவு சங்க செயலாளர் வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குன்னம்:

    பெரம்பலூர் அருகே உள்ள அரணாரை பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவர் பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் செயலாளராக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் நேற்று பாண்டியன் வழக்கம் போல் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார். மாலையில் வீடு திரும்பினார். பின்னர் வீட்டு பூட்டை திறந்து உள்ளே சென்றார். அப்போது வீட்டின் மேற்கூரையில் உள்ள கண்ணாடி உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 19 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

    இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபர்கள் வீட்டின் மேற்கூரையில் உள்ள கண்ணாடியை உடைத்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. #Tamilnews
    Next Story
    ×