search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: கணவன்- மனைவி காயம்
    X

    கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: கணவன்- மனைவி காயம்

    அணைப்பாளையத்தில் கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் கணவன்- மனைவி படுகாயம் அடைந்தனர்.
    க.பரமத்தி:

    சின்னதாராபுரம் மருதம் கார்டனை சேர்ந்தவர் கணேசன்(வயது 55). இவரது மனைவி செல்வி(50). இவர்களது மகன் ராஜேஷ்குமார்(27). இவர்கள் 3 பேரும் ஒரு காரில் கரூரில் இருந்து சின்னதாராபுரம் நோக்கி சென்று கொண்டு இருந்தனர். அணைப்பாளையம் என்ற இடத்தில் கார் சென்று கொண்டு இருந்தபோது ராஜேஷ்குமாரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதில் கணேசனும், செல்வியும் காயம் அடைந்தனர். காயம் அடைந்த 2 பேரும் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ராஜேஷ்குமார் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

    இது குறித்து சின்னதாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×