search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் அருகே கடன் தொல்லையால் தொழிலதிபர் தற்கொலை
    X

    சேலம் அருகே கடன் தொல்லையால் தொழிலதிபர் தற்கொலை

    சேலம் அருகே கடன் தொல்லையால் தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் வீராணம் அருகே உள்ள வாயக்கால் பட்டறை தோப்பு காடு பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 55). தொழிலதிபரான இவர் சேலம் 4 ரோடு பகுதியில் ஒரு ஆஸ்பத்திரியிலும் பணி புரிந்து வந்தார்.

    தொழில் வளர்ச்சிக்காக பல்வேறு நபர்களிடம் கடன் வாங்கிய பழனிசாமி வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனம் உடைந்த அவர் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×