என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகூர் அருகே மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் - பஸ் டிரைவர் கைது
Byமாலை மலர்16 April 2018 9:54 AM GMT (Updated: 16 April 2018 9:54 AM GMT)
பாகூர் அருகே மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
பாகூர்:
பாகூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி லாஸ்பேட்டையில் படித்து வந்தார். சம்பவத்தன்று அந்த மாணவி வகுப்பு முடிந்து தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். தவளக்குப்பம் 4 முனை சந்திப்பில் வந்த போது மாணவியின் தந்தைக்கு அவசரமாக போன் வரவே அவர் தனது மகளை பஸ்சில் வீட்டுக்கு செல்லும்படி கூறிவிட்டு மீண்டும் புதுவை வந்தார்.
ஆனால் அந்த மாணவி வீடு போய் சேரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவியின் பெற்றோர் உறவினர், தோழிகள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடினர். ஆனால் எங்கும் அந்த மாணவி இல்லை. இதையடுத்து மாணவியின் பெற்றோர் இதுபற்றி தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தனர்.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மாணவியை பாகூர் அருகே ஆதிங்கம்பட்டு காலனியை சேர்ந்த தனகோடி மகனான பஸ் டிரைவர் தமிழ்வாணன் (25) என்பவர் சேலத்துக்கு கடத்தி சென்று தங்க வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி அவரை தமிழ்வாணன் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்திருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சேலத்துக்கு சென்று மாணவியை மீட்டனர். மேலும் மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த தமிழ்வாணனை கைது செய்தனர். தமிழ்வாணன் மீது கடத்தல் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தடை சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.
பாகூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி லாஸ்பேட்டையில் படித்து வந்தார். சம்பவத்தன்று அந்த மாணவி வகுப்பு முடிந்து தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். தவளக்குப்பம் 4 முனை சந்திப்பில் வந்த போது மாணவியின் தந்தைக்கு அவசரமாக போன் வரவே அவர் தனது மகளை பஸ்சில் வீட்டுக்கு செல்லும்படி கூறிவிட்டு மீண்டும் புதுவை வந்தார்.
ஆனால் அந்த மாணவி வீடு போய் சேரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவியின் பெற்றோர் உறவினர், தோழிகள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடினர். ஆனால் எங்கும் அந்த மாணவி இல்லை. இதையடுத்து மாணவியின் பெற்றோர் இதுபற்றி தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தனர்.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மாணவியை பாகூர் அருகே ஆதிங்கம்பட்டு காலனியை சேர்ந்த தனகோடி மகனான பஸ் டிரைவர் தமிழ்வாணன் (25) என்பவர் சேலத்துக்கு கடத்தி சென்று தங்க வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி அவரை தமிழ்வாணன் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்திருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சேலத்துக்கு சென்று மாணவியை மீட்டனர். மேலும் மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த தமிழ்வாணனை கைது செய்தனர். தமிழ்வாணன் மீது கடத்தல் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தடை சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X