search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகூர் அருகே மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் - பஸ் டிரைவர் கைது
    X

    பாகூர் அருகே மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் - பஸ் டிரைவர் கைது

    பாகூர் அருகே மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    பாகூர்:

    பாகூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி லாஸ்பேட்டையில் படித்து வந்தார். சம்பவத்தன்று அந்த மாணவி வகுப்பு முடிந்து தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். தவளக்குப்பம் 4 முனை சந்திப்பில் வந்த போது மாணவியின் தந்தைக்கு அவசரமாக போன் வரவே அவர் தனது மகளை பஸ்சில் வீட்டுக்கு செல்லும்படி கூறிவிட்டு மீண்டும் புதுவை வந்தார்.

    ஆனால் அந்த மாணவி வீடு போய் சேரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவியின் பெற்றோர் உறவினர், தோழிகள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடினர். ஆனால் எங்கும் அந்த மாணவி இல்லை. இதையடுத்து மாணவியின் பெற்றோர் இதுபற்றி தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தனர்.

    போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மாணவியை பாகூர் அருகே ஆதிங்கம்பட்டு காலனியை சேர்ந்த தனகோடி மகனான பஸ் டிரைவர் தமிழ்வாணன் (25) என்பவர் சேலத்துக்கு கடத்தி சென்று தங்க வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி அவரை தமிழ்வாணன் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்திருப்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் சேலத்துக்கு சென்று மாணவியை மீட்டனர். மேலும் மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த தமிழ்வாணனை கைது செய்தனர். தமிழ்வாணன் மீது கடத்தல் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தடை சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.
    Next Story
    ×