search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரக்காணத்தில் மது விற்ற பெண் உள்பட 3 பேர் கைது
    X

    மரக்காணத்தில் மது விற்ற பெண் உள்பட 3 பேர் கைது

    மரக்காணத்தில் மது விற்ற பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மரக்காணம்:

    மரக்காணத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் பூமீஸ்வரன்கோவில் அருகே அனுமதியின்றி மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வளர்மதி, சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

    அங்கு மது விற்று கொண்டிருந்த மரக்காணத்தை சேர்ந்த குமார் (வயது 45), கனகராஜ் (40) மற்றும் ராணி(55) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 150 மதுப்பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×