search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலா அளித்த வாக்குமூலம் என வெளியான தகவல்கள் தவறானவை - விசாரணை ஆணையம் மறுப்பு
    X

    சசிகலா அளித்த வாக்குமூலம் என வெளியான தகவல்கள் தவறானவை - விசாரணை ஆணையம் மறுப்பு

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா தாக்கல் செய்த வாக்குமூலம் என வெளியான தகவல்கள் தவறானவை என விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது. #Sasikala
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகச்சாமி விசாரணை ஆணையத்தில் சசிகலா பிரமானப்பத்திரம் தாக்கல் செய்திருந்தார். அந்த வாக்கு மூலத்தில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றதை அமைச்சர்கள் நேரில் பார்த்ததாகவும், சசிகலா தரப்புக்கு நியாயம் கற்பிக்கும் வகையில் சில தகவல்கள் இடம்பெற்றிருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

    இந்நிலையில், மேற்படி செய்திகள் தவறானவை என விசாரணை ஆணையம் தற்போது மறுப்பு தெரிவித்துள்ளது. ஆங்கில ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளின் அடிப்படையில் பரவி வரும் தகவல்கள் பெரும்பாலும் தவறானவை என குறிப்பிடப்பட்டுள்ளது. #Sasikala #Jayalalithaa #TamilNews
    Next Story
    ×