என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரியகாலாப்பட்டில் பார் கேஷியர் வீட்டில் புகுந்து ரூ.1 லட்சம் நகை, பணம் கொள்ளை
Byமாலை மலர்21 March 2018 9:44 AM GMT (Updated: 21 March 2018 9:44 AM GMT)
பெரிய காலாப்பட்டில் பார் கேஷியர் வீட்டில் புகுந்து நகை- பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
சேதராப்பட்டு:
புதுவை பெரிய காலாப்பட்டு பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 48). இவர் காலாப்பட்டு பல்கலைக்கழகம் எதிரே உள்ள பாரில் கேஷியராக உள்ளார். இவர் குடும்பத்துடன் தனது உறவினர் திருமணத்துக்காக திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டுக்கு சென்றார். அங்கு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரவு வீடு திரும்பினார்.
அப்போது அவரது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோவில் வைத்திருந்த துணிமணிகள் சிதறி கிடந்தது.
மேலும் பீரோவில் வைத்திருந்த ரூ.40 ஆயிரம் ரொக்க பணம், 8 கிராம் தங்க செயின், 4 கிராம் கம்மல், தங்க மெட்டல், 40 கிராம் சில்வர் உள்ளிட்டவை திருடப்பட்டு இருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ. 1 லட்சம் ஆகும்.
இதுகுறித்து அவர் காலாப்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமச் சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
மேலும் கைரேகை நிபுணர்களை வரவழைத்தனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.
போலீஸ் விசாரணையில் அங்கு சிறுவர்களின் கால்தடயம் பதிவாகி இருந்தது. அந்த வீட்டின் தாழ்ப்பாளை நெம்பி உள்ளே சென்று கொள்ளையடித்துள்ளனர். கொள்ளையில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்த சிறுவர்களா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுவை பெரிய காலாப்பட்டு பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 48). இவர் காலாப்பட்டு பல்கலைக்கழகம் எதிரே உள்ள பாரில் கேஷியராக உள்ளார். இவர் குடும்பத்துடன் தனது உறவினர் திருமணத்துக்காக திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டுக்கு சென்றார். அங்கு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரவு வீடு திரும்பினார்.
அப்போது அவரது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோவில் வைத்திருந்த துணிமணிகள் சிதறி கிடந்தது.
மேலும் பீரோவில் வைத்திருந்த ரூ.40 ஆயிரம் ரொக்க பணம், 8 கிராம் தங்க செயின், 4 கிராம் கம்மல், தங்க மெட்டல், 40 கிராம் சில்வர் உள்ளிட்டவை திருடப்பட்டு இருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ. 1 லட்சம் ஆகும்.
இதுகுறித்து அவர் காலாப்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமச் சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
மேலும் கைரேகை நிபுணர்களை வரவழைத்தனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.
போலீஸ் விசாரணையில் அங்கு சிறுவர்களின் கால்தடயம் பதிவாகி இருந்தது. அந்த வீட்டின் தாழ்ப்பாளை நெம்பி உள்ளே சென்று கொள்ளையடித்துள்ளனர். கொள்ளையில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்த சிறுவர்களா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X