என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முத்தியால்பேட்டையில் தச்சு தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
Byமாலை மலர்12 March 2018 10:08 AM GMT (Updated: 12 March 2018 10:08 AM GMT)
முத்தியால்பேட்டையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தச்சு தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
முத்தியால்பேட்டை கணேஷ் நகரை சேர்ந்தவர் முருகன் (வயது30), தச்சு தொழிலாளி. இவருக்கு சுமந்தா என்ற மனைவியும் லோகேஷ் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மதுகுடிக்கும் பழக்கம் உள்ள முருகன் நேற்று மாலை மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் எதிரே விளையாடி கொண்டிருந்த மகனை அழைத்து மிரட்டி அடித்தார்.
இதனை கண்ட சுமந்தா கணவனை கண்டித்து குழந்தையை ஏன் அடிக்கிறீர்கள் என கேட்டு திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் முருகன் மனவேதனை அடைந்தார். வீட்டின் அறைக்குள் சென்று உள்பக்கமாக பூட்டிக்கொண்டார். கணவர் கோபத்தில் தூங்கி விட்டதாக சுமந்தா நினைத்தார்.
இரவு 9 மணிக்கு சாப்பிடுவதற்காக சுமந்தா கதவை தட்டி முருகனை அழைத்தார். ஆனால் வெகு நேரமாக கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது கணவர் மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தூக்கில் இருந்து முருகனை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் முருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் சோலைநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
முத்தியால்பேட்டை கணேஷ் நகரை சேர்ந்தவர் முருகன் (வயது30), தச்சு தொழிலாளி. இவருக்கு சுமந்தா என்ற மனைவியும் லோகேஷ் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மதுகுடிக்கும் பழக்கம் உள்ள முருகன் நேற்று மாலை மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் எதிரே விளையாடி கொண்டிருந்த மகனை அழைத்து மிரட்டி அடித்தார்.
இதனை கண்ட சுமந்தா கணவனை கண்டித்து குழந்தையை ஏன் அடிக்கிறீர்கள் என கேட்டு திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் முருகன் மனவேதனை அடைந்தார். வீட்டின் அறைக்குள் சென்று உள்பக்கமாக பூட்டிக்கொண்டார். கணவர் கோபத்தில் தூங்கி விட்டதாக சுமந்தா நினைத்தார்.
இரவு 9 மணிக்கு சாப்பிடுவதற்காக சுமந்தா கதவை தட்டி முருகனை அழைத்தார். ஆனால் வெகு நேரமாக கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது கணவர் மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தூக்கில் இருந்து முருகனை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் முருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் சோலைநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X