search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எச். ராஜாவை கண்டித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
    X

    எச். ராஜாவை கண்டித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

    பெரியார் சிலை குறித்து அவதூறு கருத்து தெரிவித்த எச். ராஜாவை கண்டித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    திரிபுராவில் லெனின் சிலைகள் உடைக்கப்பட்டது போல தமிழகத்தில் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என்று சமூக வளைத்தளத்தில் பாரதீய ஜனதாவை சேர்ந்த எச்.ராஜா கருத்து தெரிவித்து இருந்தார். எச்.ராஜாவின் இந்த கருத்துக்கு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர், சமூக இயக்கத்தினர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களும் நடத்தினர். இதையடுத்து எச்.ராஜா தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்து அந்த கருத்தை வாபஸ் பெற்றார்.

    இந்த நிலையில் புதுவை பிரதேச மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திரிபுராவில் பாரதீய ஜனதாவினரின் வன்முறை வெறியாட்டம், கம்யூனிஸ்டு அலுவலகங்கள் மீது தாக்குதல், லெனின்சிலை உடைப்பு, எச்.ராஜாவின் கருத்து ஆகியவற்றுக்கு கண்டனம் தெரிவித்து புதுவை நேருவீதி- காந்திவீதி சந்திப்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ஆர்ப்பாட்டத்துக்கு மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள் தலைமை தாங்கினார். தி.மு.க. அமைப்பாளர்கள் எஸ்.பி.சிவக்குமார், சிவா எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், விடுதலை சிறுத்தை கட்சியின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், கம்யூனிஸ்டு (எம்.எல்.) சோ.பாலசுப்பிரமணியன், திராவிடர் கழகம் சிவ. வீரமணி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம், நிர்வாகிகள் முருகன், மதிவாணன், சீனுவாசன், நடராஜன், தமிழ்செல்வன், அன்புமணி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். #tamilnews

    Next Story
    ×