search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெட்டப்பாக்கத்தில் மாட்டு வண்டி தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது
    X

    நெட்டப்பாக்கத்தில் மாட்டு வண்டி தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது

    நெட்டப்பாக்கத்தில் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக சென்றவரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சேதராப்பட்டு:

    நெட்டப்பாக்கத்தை அடுத்த மடுகரை நவசிங்கபுரத்தை சேர்ந்தவர் ராமர். இவர், மாட்டு வண்டியில் மணல் ஏற்றி விற்பனை செய்து வருகிறார்.

    இவருக்கும் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த செல்வத்துக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இது சம்பந்தமாக வளவனூர் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இதற்காக ராமர் போலீஸ் நிலையம் சென்றார்.

    மடுகரை அருகே ராமர் சென்ற போது, செல்வம் மற்றும் அவரது மகன் ரஞ்சித்குமார், ரகுமான் ஆகிய 3 பேரும் வழிமறித்து இரும்பு பைப்பால் ராமரை தாக்கினர்.

    இதில் தலையில் காயம் அடைந்த ராமர் சிகிச்சை பெற்றார். பின்னர் இதுபற்றி மடுகரை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் செல்வம், ரஞ்சித் குமார், ரகுமான் ஆகிய 3 பேரையும் கைது செய்து காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×