என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெட்டப்பாக்கத்தில் மாட்டு வண்டி தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது
Byமாலை மலர்7 March 2018 10:44 AM GMT (Updated: 7 March 2018 10:44 AM GMT)
நெட்டப்பாக்கத்தில் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக சென்றவரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேதராப்பட்டு:
நெட்டப்பாக்கத்தை அடுத்த மடுகரை நவசிங்கபுரத்தை சேர்ந்தவர் ராமர். இவர், மாட்டு வண்டியில் மணல் ஏற்றி விற்பனை செய்து வருகிறார்.
இவருக்கும் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த செல்வத்துக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இது சம்பந்தமாக வளவனூர் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இதற்காக ராமர் போலீஸ் நிலையம் சென்றார்.
மடுகரை அருகே ராமர் சென்ற போது, செல்வம் மற்றும் அவரது மகன் ரஞ்சித்குமார், ரகுமான் ஆகிய 3 பேரும் வழிமறித்து இரும்பு பைப்பால் ராமரை தாக்கினர்.
இதில் தலையில் காயம் அடைந்த ராமர் சிகிச்சை பெற்றார். பின்னர் இதுபற்றி மடுகரை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் செல்வம், ரஞ்சித் குமார், ரகுமான் ஆகிய 3 பேரையும் கைது செய்து காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X