search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாரிமுனையில் ரூ.25 லட்சம் ஹவாலா பணம் வழிப்பறி: 6 பேர் கும்பல் கைவரிசை
    X

    பாரிமுனையில் ரூ.25 லட்சம் ஹவாலா பணம் வழிப்பறி: 6 பேர் கும்பல் கைவரிசை

    பாரிமுனையில் மிளகாய் பொடி தூவி ரூ.25 லட்சம் ஹவாலா பணம் வழிப்பறி சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயபுரம்:

    திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் ரபீக். இவர் நேற்று இரவு பர்மா பஜாரில் இருந்து ரூ.25 லட்சம் பணத்துடன் மோட்டார் சைக்கிளில் பாரிமுனைக்கு சென்றார்.

    பாரிமுனை நைனியப்பன் தெருவில் சென்று கொண்டிருந்த போது 2 மோட்டார் சைக்கிள்களில் பின் தொடர்ந்த 6 பேர் ரபீக்கின் மோட்டார் சைக்கிள் மீது மோதினர். இதில் நிலை குலைந்த அவர் கீழே விழுந்தார். உடனடியாக 6 பேரும் சேர்ந்து ரபீக்கின் முகத்தில் மிளகாய் பொடியை தூவினர்.

    இதனால் கண் எரிச்சலில் அவர் துடித்தார். அப்போது ரபீக்கிடம் இருந்த ரூ.25 லட்சம் பணப்பையை கொள்ளையடித்து பறித்துச் சென்றனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் பூக்கடை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து மோதி கீழே தள்ளியதில் காயம் அடைந்த ரபீக் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    ரபீக் மோட்டார் சைக்கிளில் எடுத்து வந்த ரூ.25 லட்சம் பணம் பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அது ஹவாலா பணம் என்பது தெரியவந்தது. இதன் பின்னணி குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பணத்தை ரபீக் பர்மாபஜாரில் யாரிடமிருந்து வாங்கி வந்தார்? யாருக்கு கொடுப்பதற்காக கொண்டு சென்றார் என்பது பற்றி விசாரணை நடைபெறுகிறது. #tamilnews

    Next Story
    ×