search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவையாறில் லாரி மோதி பெட்ரோல் பங்க் ஊழியர் பலி
    X

    திருவையாறில் லாரி மோதி பெட்ரோல் பங்க் ஊழியர் பலி

    திருவையாறில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் பலியானார்.

    திருவையாறு:

    திருவையாறு அருகே உள்ள பெரும்புலியூர் வடக்கு தெருவை சேர்ந்த அன்பழகன் மகன் விக்னேஸ்வரன் (வயது 21). இவர் திருவையாறில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இன்று காலை விக்னேஸ் வரனும், திருவையாறை சேர்ந்த செந்தில் குமார் (16). என்பவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் திருவையாறு தெற்கு வீதியில் உள்ள மெயின் ரோட்டில் சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் படுகாயமடைந்த விக்னேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் செந்தில்குமார் படுகாயமடைந்தார். இது பற்றிய தகவல் கிடைத்ததும் திருவையாறு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.

    இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த கிளீனர் சிவா (27). என்பவரையும், டிரைவர் ராஜூ (34). என்பவரையும் கைது செய்தார்.

    விபத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் பலியான சம்பவம் திருவையாறில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews

    Next Story
    ×