என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீடு - வீடாக கள ஆய்வு: வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்க்க வாய்ப்பு
Byமாலை மலர்23 Nov 2017 11:56 AM GMT (Updated: 23 Nov 2017 11:57 AM GMT)
ஈரோட்டில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுவீடாகச் சென்று ஒவ்வொரு குடும்பத்திலுள்ள வாக்காளர்களின் விபரங்களை சேகரிக்கும் சிறப்பு கள ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் 1.1.2018-ஐ தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் 15.11.2017 முதல் 30.11.2017 வரை நேரடியாக வீடுவீடாகச் சென்று ஒவ்வொரு குடும்பத்திலுள்ள வாக்காளர்களின் விபரங்களை சேகரிக்கும் சிறப்பு கள ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இக்கள ஆய்வின்போது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக வரும்பொழுது பொது மக்கள் தங்களது பெயர்களை சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல், அயல்நாடு வாழ் வாக்காளர்களின் பெயர் சேர்க்கப்பட்ட மற்றும் சேர்க்கப்படவேண்டிய விபரம் அளித்தல் வேண்டும்.
மேலும் இறந்த மற்றும் குடிபெயர்ந்த குடும்ப உறுப்பினர்களின் விபரங்களை அளித்தல் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கோரும் இதர விபரங்களை அளிக்கவும், மேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக வரும் பொழுது வீட்டின் கதவுகள் நிரந்தரமாக பூட்டப்பட்டிருப்பின் விபரங்களின் அடிப்படையில் அவ்வீட்டின் வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியல் இருந்து நீக்கப்படும்.
எனவே பொது மக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது விபரங்களை முழுமையாக அளித்து வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்த்தல், முகவரி திருத்தம் செய்வதற்கும், இறந்த மற்றும் குடிபெயர்ந்த வாக்காளர்களை நீக்குவதற்கும், முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பிரபாகர் அதில் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் 1.1.2018-ஐ தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் 15.11.2017 முதல் 30.11.2017 வரை நேரடியாக வீடுவீடாகச் சென்று ஒவ்வொரு குடும்பத்திலுள்ள வாக்காளர்களின் விபரங்களை சேகரிக்கும் சிறப்பு கள ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இக்கள ஆய்வின்போது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக வரும்பொழுது பொது மக்கள் தங்களது பெயர்களை சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல், அயல்நாடு வாழ் வாக்காளர்களின் பெயர் சேர்க்கப்பட்ட மற்றும் சேர்க்கப்படவேண்டிய விபரம் அளித்தல் வேண்டும்.
மேலும் இறந்த மற்றும் குடிபெயர்ந்த குடும்ப உறுப்பினர்களின் விபரங்களை அளித்தல் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கோரும் இதர விபரங்களை அளிக்கவும், மேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக வரும் பொழுது வீட்டின் கதவுகள் நிரந்தரமாக பூட்டப்பட்டிருப்பின் விபரங்களின் அடிப்படையில் அவ்வீட்டின் வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியல் இருந்து நீக்கப்படும்.
எனவே பொது மக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது விபரங்களை முழுமையாக அளித்து வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்த்தல், முகவரி திருத்தம் செய்வதற்கும், இறந்த மற்றும் குடிபெயர்ந்த வாக்காளர்களை நீக்குவதற்கும், முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பிரபாகர் அதில் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X