என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி பலி
Byமாலை மலர்19 Oct 2017 8:20 AM GMT (Updated: 19 Oct 2017 8:20 AM GMT)
கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு சேர்க்கப்பட்ட 6 வயது சிறுமி விஸ்மிதா சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.
கோவை :
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த 4 மாதத்தில் கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் டெங்கு காய்ச்சலுக்கு 53 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 18 பேரும் பலியாகி உள்ளனர்.
இந்தநிலையில் கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள செல்லனூரை சேர்ந்தவர் சத்யமூர்த்தி. இவரது மகள் விஸ்மிதா ( வயது 6). இவர் கடந்த 10 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவரது பெற்றோர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு விஸ்மிதாவை அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. இதனையடுத்து டாக்டர்கள் விஸ்மிதாவின் ரத்தத்தை பரிசோதனை செய்த போது அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
பின்னர் விஸ்மிதாவை அவரது பெற்றோர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர் டெங்கு காய்ச்சல் சிறப்பு வார்டில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர்.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் விஸ்மிதா நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இதனால் கோவையில் கடந்த 4 மாதத்தில் டெங்கு காய்ச்சலக்கு பலியா னவர்களின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு 42 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 184 பேரும் அனுமதிக் கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சிறப்பு வார்டில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த 4 மாதத்தில் கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் டெங்கு காய்ச்சலுக்கு 53 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 18 பேரும் பலியாகி உள்ளனர்.
இந்தநிலையில் கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள செல்லனூரை சேர்ந்தவர் சத்யமூர்த்தி. இவரது மகள் விஸ்மிதா ( வயது 6). இவர் கடந்த 10 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவரது பெற்றோர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு விஸ்மிதாவை அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. இதனையடுத்து டாக்டர்கள் விஸ்மிதாவின் ரத்தத்தை பரிசோதனை செய்த போது அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
பின்னர் விஸ்மிதாவை அவரது பெற்றோர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர் டெங்கு காய்ச்சல் சிறப்பு வார்டில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர்.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் விஸ்மிதா நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இதனால் கோவையில் கடந்த 4 மாதத்தில் டெங்கு காய்ச்சலக்கு பலியா னவர்களின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு 42 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 184 பேரும் அனுமதிக் கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சிறப்பு வார்டில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X