என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புவனகிரி அருகே இடி தாக்கி மீனவர் பலி
Byமாலை மலர்12 Aug 2017 10:33 AM GMT (Updated: 12 Aug 2017 10:33 AM GMT)
கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக இரவு நேரத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் மழை கொட்டியது. இதில் இடி தாக்கி மீனவர் ஒருவர் இறந்து உள்ளார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்துள்ள பூ.மாணம்பாடியை சேர்ந்தவர் சங்கர் (வயது 50), மீனவர். இவர் நேற்று இரவு பைபர் படகில் பூ.மாணம்பாடி வெள்ளாற்றின் முக துவாரத்தில் மீன் பிடிக்க சென்றார்.
அப்போது புவனகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
வெள்ளாற்றின் முக துவாரத்தில் மீன் பிடித்து கொண்டிருந்த சங்கரின் பைபர் படகில் இடி தாக்கியது. இதில் அவர் அதே இடத்தில் உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த தகவல் அவரது குடும்பத்துக்கு தெரிய வந்ததும் அவர்கள் கதறி அழுதனர்.
இடி தாக்கி மீனவர் இறந்த தகவல் பரங்கிப்பேட்டை போலீசாருக்கு இன்று காலை தெரிய வந்தது. அவர்கள் சம்பவ இடம் விரைந்து சென்று வெள்ளாற்றின் முகத்துவாரத்தில் இறந்து கிடந்த சங்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரங்கிப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இடி தாக்கி மீனவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்துள்ள பூ.மாணம்பாடியை சேர்ந்தவர் சங்கர் (வயது 50), மீனவர். இவர் நேற்று இரவு பைபர் படகில் பூ.மாணம்பாடி வெள்ளாற்றின் முக துவாரத்தில் மீன் பிடிக்க சென்றார்.
அப்போது புவனகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
வெள்ளாற்றின் முக துவாரத்தில் மீன் பிடித்து கொண்டிருந்த சங்கரின் பைபர் படகில் இடி தாக்கியது. இதில் அவர் அதே இடத்தில் உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த தகவல் அவரது குடும்பத்துக்கு தெரிய வந்ததும் அவர்கள் கதறி அழுதனர்.
இடி தாக்கி மீனவர் இறந்த தகவல் பரங்கிப்பேட்டை போலீசாருக்கு இன்று காலை தெரிய வந்தது. அவர்கள் சம்பவ இடம் விரைந்து சென்று வெள்ளாற்றின் முகத்துவாரத்தில் இறந்து கிடந்த சங்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரங்கிப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இடி தாக்கி மீனவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X