என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தனியார் பால் பற்றி தவறான தகவல்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை நீக்க முதல்வருக்கு பால்முகவர் சங்கம் கோரிக்கை
Byமாலை மலர்25 Jun 2017 8:52 AM GMT (Updated: 25 Jun 2017 8:52 AM GMT)
தனியார் பால் நிறுவனங்கள் பற்றி தவறான தகவல் அளித்த கே.டி.ராஜேந்திர பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பால்முகவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னை:
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச்சங்க மாநில தலைவர் சு.ஆ. பொன்னுசாமி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
கடந்த மே மாதம் முதல் வாரம் தொடங்கி தொடர்ந்து “தனியார் பால் நிறுவனங்கள் ரசாயனம் கலப்படம் செய்கின்றன” எனவும், “தனியார் பாலை குடிப்பதால் குழந்தைகளுக்கு புற்றுநோய் வருகிறது” எனவும் தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சர்ச்சைக்குரிய வகையில் பேசி பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தினார்.
புனேவில் உள்ள மத்திய அரசின் உணவு பகுப்பாய்வுக் கூடத்திற்கு தமிழகத்தில் இருந்து சோதனைக்காக அனுப்பப்பட்ட பால் மாதிரிகள் அந்த ஆய்வகத்தின் அதிகாரிகளால் வாங்க மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாகவும், அதற்கு மத்திய அரசு அதிகாரிகளும் துணை போவதாகவும் கூறினார்.
தனியார் பால் நிறுவனங்கள் மீது கலப்படம் தொடர்பாக இது வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஜுன் 19-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
அதனடிப்படையில் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடந்த அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கடந்த தமிழகம் முழுவதும் சுமார் 886 பால் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்ததாகவும், அதில் 187 பால் மாதிரிகள் மட்டும் தரம் குறைந்து காணப்பட்டதாகவும், “எந்த பால் மாதிரியும் பாதுகாப்பற்றது என நிருபணமாகவில்லை” எனவும் தெரிவித்திருந்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் தாக்கல் செய்த பதில் மனுவிலும், புனேவில் உள்ள மத்திய அரசின் உணவு பகுப்பாய்வுக் கூடத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகள் அடிப்படையில் அதன் அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவலின் படியும் தனியார் பால் நிறுவனங்கள் உயிருக்கு தீங்கிழைக்கும் ரசாயன பொருட்களை கலப்படம் செய்யவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே பொறுப்பின்றி செயல்பட்ட கே.டி. ராஜேந்திர பாலாஜியை தமிழக பால்வளத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து உடனடியாக பதவி நீக்கம் செய்வதோடு மட்டுமின்றி, பொதுமக்கள் நலன் சார்ந்து கலப்படப் பாலினை தடுக்க அனைத்து பால் நிறுவனங்களையும் ரகசியமாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்காமல் “தனியார் பால் நிறுவனங்கள் ரசாயனம் கலப்படம் செய்கின்றன” என ஒட்டுமொத்தமாக பொது வெளியிலும், ஊடகங்களிலும் பேசியதில் “ஏதோ உள்நோக்கம் கொண்டதாக தெரிவதால்” அவர் அவ்வாறு பேசியதற்கான காரணத்தை அறிய உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க தாங்கள் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச்சங்க மாநில தலைவர் சு.ஆ. பொன்னுசாமி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
கடந்த மே மாதம் முதல் வாரம் தொடங்கி தொடர்ந்து “தனியார் பால் நிறுவனங்கள் ரசாயனம் கலப்படம் செய்கின்றன” எனவும், “தனியார் பாலை குடிப்பதால் குழந்தைகளுக்கு புற்றுநோய் வருகிறது” எனவும் தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சர்ச்சைக்குரிய வகையில் பேசி பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தினார்.
புனேவில் உள்ள மத்திய அரசின் உணவு பகுப்பாய்வுக் கூடத்திற்கு தமிழகத்தில் இருந்து சோதனைக்காக அனுப்பப்பட்ட பால் மாதிரிகள் அந்த ஆய்வகத்தின் அதிகாரிகளால் வாங்க மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாகவும், அதற்கு மத்திய அரசு அதிகாரிகளும் துணை போவதாகவும் கூறினார்.
தனியார் பால் நிறுவனங்கள் மீது கலப்படம் தொடர்பாக இது வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஜுன் 19-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
அதனடிப்படையில் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடந்த அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கடந்த தமிழகம் முழுவதும் சுமார் 886 பால் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்ததாகவும், அதில் 187 பால் மாதிரிகள் மட்டும் தரம் குறைந்து காணப்பட்டதாகவும், “எந்த பால் மாதிரியும் பாதுகாப்பற்றது என நிருபணமாகவில்லை” எனவும் தெரிவித்திருந்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் தாக்கல் செய்த பதில் மனுவிலும், புனேவில் உள்ள மத்திய அரசின் உணவு பகுப்பாய்வுக் கூடத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகள் அடிப்படையில் அதன் அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவலின் படியும் தனியார் பால் நிறுவனங்கள் உயிருக்கு தீங்கிழைக்கும் ரசாயன பொருட்களை கலப்படம் செய்யவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே பொறுப்பின்றி செயல்பட்ட கே.டி. ராஜேந்திர பாலாஜியை தமிழக பால்வளத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து உடனடியாக பதவி நீக்கம் செய்வதோடு மட்டுமின்றி, பொதுமக்கள் நலன் சார்ந்து கலப்படப் பாலினை தடுக்க அனைத்து பால் நிறுவனங்களையும் ரகசியமாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்காமல் “தனியார் பால் நிறுவனங்கள் ரசாயனம் கலப்படம் செய்கின்றன” என ஒட்டுமொத்தமாக பொது வெளியிலும், ஊடகங்களிலும் பேசியதில் “ஏதோ உள்நோக்கம் கொண்டதாக தெரிவதால்” அவர் அவ்வாறு பேசியதற்கான காரணத்தை அறிய உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க தாங்கள் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X