என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஊசுடு தொகுதியில் ரூ.32 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: நாராயணசாமி வழங்கினார்
சேதராப்பட்டு:
ஊசுடு தொகுதியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பிறந்தநாள் விழா மற்றும் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பத்துக்கண்ணுவில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முதல்-அமைச்சர் நிவாரணநிதியில் இருந்து 356 பயனாளிகளுக்கு மருத்துவ நிதி உதவியாக ரூ.14 லட்சத்து 24 ஆயிரமும், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மூலம் 89 பயனாளிகளுக்கு விதவை உதவித்தொகையாக தலா1.500 வீதம் ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து 500-ம், 22 சலவை தொழிலாளர்களுக்கு சலவைபெட்டியும், 30 பயனாளிகளுக்கு சிறுவணிக கடனாக ரூ.15 லட்சம் என ரூ.32 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் நாராயணசாமி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுதுறை இயக்குனர் மீனாகுமாரி, இணை இயக்குனர் தனலட்சுமி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டுதுறை உதவி இயக்குனர் சுகந்தி மற்றும் ஊசுடு தொகுதி வட்டார காங்கிரஸ் தலைவர் அருணகிரி மற்றும் காங்கிரஸ்- தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்