என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
பியூட்டி பார்லர் தொடங்கும் பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை
Byமாலை மலர்20 Nov 2018 7:49 AM GMT (Updated: 20 Nov 2018 7:49 AM GMT)
பியூட்டி பார்லர்கள் அதிகமாகிவிட்ட இன்றைய நிலையில் சுயதொழில் செய்ய விரும்பும் பெண்கள் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அவை என்னவென்று பார்க்கலாம்.
அழகுத்துறை என்பது என்றுமே ஆடம்பரமாகப் பார்க்கப்படுவதில்லை. அதை ஆரோக்கியத்துடனும் தொடர்புடைய ஒரு துறையாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. எத்தனை பியூட்டி பார்லர்கள் திறக்கப்பட்டாலும் எல்லாவற்றுக்கும் நிச்சயம் வரவேற்பு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. புதிதாக பார்லர் தொடங்கும் முன் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
பார்லர் தொடங்கப் போகிற ஏரியா மிக முக்கியம். பார்லர் தொடங்கப்படவிருக்கிற இடத்தின் அருகில் உள்ள மக்கள் எப்படிப்பட்டவர்கள், அவர்களுக்கு பார்லர் வர வேண்டிய தேவையும் வசதியும் இருக்குமா எனப் பார்க்க வேண்டும். ‘என்னிடம் திறமை இருக்கிறது.. என்னைத் தேடி எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் மக்கள் வருவார்கள்’ என்று நினைக்க வேண்டாம். அதெல்லாம் நீங்கள் பார்லர் பிசினஸில் உங்களைத் தக்க வைத்துக் கொண்டு, வாடிக்கையாளர்களிடம் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்ற பிறகுதான் சாத்தியம்.
அடுத்தது வேலை தெரிந்த ஆட்களை நியமிக்க வேண்டியது முக்கியம். கற்றுக்குட்டிகளை வைத்து வேலை வாங்கினால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள். அடுத்த முறை உங்களைத் தேடி வர மாட்டார்கள். மூன்றாவதாக தரமான அழகு சாதனங்களை உபயோகிக்க வேண்டியது முக்கியம். நீங்கள் உபயோகிக்கிற பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு அலர்ஜியையோ, பக்க விளைவுகளையோ ஏற்படுத்தக்கூடாது.
தரத்தில் எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்கக்கூடாது. இன்று பார்லர் ஆரம்பித்துவிட்டு, நாளைக்கே லாபம் கொட்டும் என்கிற கனவில் மிதப்பது மிகவும் தவறு. இந்தத் துறையில் பொறுமை மிக மிக அவசியம். உழைப்பையும் முயற்சியையும் தொடர்ந்து கொண்டிருங்கள். லாபமும் நற்பெயரும் தானாக வரும்.
பார்லர் தொடங்கப் போகிற ஏரியா மிக முக்கியம். பார்லர் தொடங்கப்படவிருக்கிற இடத்தின் அருகில் உள்ள மக்கள் எப்படிப்பட்டவர்கள், அவர்களுக்கு பார்லர் வர வேண்டிய தேவையும் வசதியும் இருக்குமா எனப் பார்க்க வேண்டும். ‘என்னிடம் திறமை இருக்கிறது.. என்னைத் தேடி எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் மக்கள் வருவார்கள்’ என்று நினைக்க வேண்டாம். அதெல்லாம் நீங்கள் பார்லர் பிசினஸில் உங்களைத் தக்க வைத்துக் கொண்டு, வாடிக்கையாளர்களிடம் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்ற பிறகுதான் சாத்தியம்.
அடுத்தது வேலை தெரிந்த ஆட்களை நியமிக்க வேண்டியது முக்கியம். கற்றுக்குட்டிகளை வைத்து வேலை வாங்கினால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள். அடுத்த முறை உங்களைத் தேடி வர மாட்டார்கள். மூன்றாவதாக தரமான அழகு சாதனங்களை உபயோகிக்க வேண்டியது முக்கியம். நீங்கள் உபயோகிக்கிற பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு அலர்ஜியையோ, பக்க விளைவுகளையோ ஏற்படுத்தக்கூடாது.
தரத்தில் எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்கக்கூடாது. இன்று பார்லர் ஆரம்பித்துவிட்டு, நாளைக்கே லாபம் கொட்டும் என்கிற கனவில் மிதப்பது மிகவும் தவறு. இந்தத் துறையில் பொறுமை மிக மிக அவசியம். உழைப்பையும் முயற்சியையும் தொடர்ந்து கொண்டிருங்கள். லாபமும் நற்பெயரும் தானாக வரும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X