search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கர்ப்ப கால நீரிழிவு பிரசவத்தில் ஏற்படுத்தும் விளைவுகள்
    X

    கர்ப்ப கால நீரிழிவு பிரசவத்தில் ஏற்படுத்தும் விளைவுகள்

    கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டால் அது பிரசவத்தில் போது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
    * கர்ப்ப கால நீரிழிவு உள்ளவர்களில் 10-25 சதவிகிதத்தினரை Pre-eclampsia பிரச்சனை தாக்குகிறது. இது உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரில் அதிக புரோட்டீன் கலப்பு ஏற்பட்டு சிறுநீரகம் பாதிக்கப்படுகிற நிலை.

    * நோய்த்தொற்று மற்றும் அதனால் ஏற்படும் வீக்கம்… தாய்க்கு மட்டுமல்லாமல் கருவுக்கும் தொற்றக்கூடும்.

    * குழந்தை பிறந்த உடன் அதீத ரத்தப்போக்கு

    * சிசேரியன் செய்ய வேண்டிய நிலை

    * எடை கூடுதல்

    * உயர் ரத்த அழுத்தம்

    * கரு கலைதல்

    * மூன்றாவது ட்ரைமஸ்டரில் குழந்தை இறத்தல்

    * டைப் - 2 நீரிழிவாக மாற்றம் அடைதல்

    * வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்த அதிக இன்சுலின் தேவைப்படுதல்

    * ரெட்டினோபதி எனும் விழித்திரை நோய் ஏற்படுதல்

    * நெப்ரோபதி எனும் சிறுநீரகப் பிரச்னைகள் உண்டாகுதல்… சிறுநீரகச் செயல் இழப்புக்கான அறிகுறிகள் தோன்றுதல்



    * கரோனரி ஆர்டரி எனும் இதயப் பிரச்னை வலுவடைதல், ஏற்கனவே பிரச்னை அதிகம் இருப்பின் பிரசவ மரணம் ஏற்படுதல்

    * கார்டியோமையோபதி எனும் இதயத்தசை நோய் ஏற்படுதல்.

    கருவில் ஏற்படும் பிரச்சனைகள்

    * பிறப்புநிலைக் கோளாறுகள்

    * பிறக்கும்போதே ரத்த சர்க்கரை குறைவு

    * மேக்ரோஸ்மியா (4 கிலோவுக்கும் அதிக எடை உள்ள பிக் பேபி சிண்ட்ரோம்). இது மூளை தவிர மற்ற எல்லா உறுப்புகளையும் பாதிக்கும்.

    * மஞ்சள் காமாலை

    * ரத்தத்தில் கால்சியம் பற்றாக்குறை (Hypocalcaemia), மெக்னீசிய சத்துக் குறைவு (Hypomagnesemia)

    * பிறப்பதிர்ச்சி (Birth trauma), மேக்ரோஸ்மியா காரணமாக வலிமிகு பிரசவம்

    * குறைப் பிரசவம்

    * Hyaline membrane எனும் நுரையீரல் நோய்

    * மூச்சின்மை, குறை இதயத் துடிப்பு (Apnea and bradycardia).
    Next Story
    ×