என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய இயற்கை வழிமுறைகள்
Byமாலை மலர்13 Nov 2018 4:44 AM GMT (Updated: 13 Nov 2018 4:44 AM GMT)
சிலருக்கு முகத்தில் பருக்கள் வந்த தடம், கரும்புள்ளியாக மாறியிருக்கும். இந்த பிரச்சனைக்கு வீட்டிலேயே தினமும் அரை மணி நேரம் செலவு செய்தால் போதுமானது.
வெயிலின் தாக்கம் காரணமாகச் முகச்சருமம் அதிகளவு பாதிக்கப்படும் இதனால், எப்போதும் களைப்பான தோற்றமாக இருக்கும். இதற்கு காரணம் சருமத்தில் உள்ள மெலனின் அளவு அதிகரிப்பால் தான். இதைத் தவிர்க்க, பியூட்டி பார்லருக்குத்தான் செல்ல வேண்டும் என்றில்லை. வீட்டிலேயே தினமும் அரை மணி நேரம் செலவு செய்தால் போதும். எப்போதும் பிரெஷ்ஷாக இருக்கலாம்.
சிலருக்கு முகத்தில் பருக்கள் வந்த தடம், கரும்புள்ளியாக மாறியிருக்கும். இந்தக் கரும்புள்ளிகளை நீக்குவதில் தேன் மிகச்சிறந்த பணியாற்றுகிறது. மேலும், சருமத்தின் நிறத்தை அதிகரிக்கவும் தேன் பயன்படுகிறது. எனவே, தினமும் ஒருமுறை சுத்தமான தேனை முகத்தில் தடவி, சிறிது நேரம் ஊறவிட்டு, குளிர்ந்த நீரால் கழுவினால், கரும்புள்ளிகள் குறையும்.
ஜாதிகாய்த்தூளுடன் சந்தனத்தூளைச் சம அளவில் எடுத்துக்கொண்டு, அதனுடன் சிறிது கஸ்தூரி மஞ்சள்தூள் கலந்து முகத்தில் பேஸ் பேக் போட்டு, 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் குளிர்ந்த நீரால் கழுவவும். இப்படித் தொடர்ந்து செய்தாலும் கரும்புள்ளி காணாமல்போகும்.
சில பெண்களுக்கு முகம் பளிச்சிட்டாலும் கண்கள் சோர்வடைந்து காணப்படும். இது அவர்களின் முக அழகைக் கெடுக்கும். எனவே, கண்களைப் புத்துணர்வுடன் வைத்திருக்க, ஒரு வெண்தாமரையின் இதழ்களை 10 மில்லி விளக்கெண்ணெய்யுடன் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். இதை, காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் இதைக் கண்கள் மீது தடவி, அரை மணி நேரம் கழித்துக் குளிர்ந்த தண்ணீரில் கழுவினால், புத்துணர்ச்சியும் குளிர்ச்சியும் கிடைக்கும்.
மேலும், விளக்கெண்ணெய்யைப் பயன்படுத்தி, வலதுபுறத்திலிருந்து இடதுபுறம், இடதுபுறத்திலிருந்து வலதுபுறம் என கண்களைச் சுற்றி மெதுவாக மசாஜ் செய்தாலும், கண்கள் கோலிக்குண்டாக மிளிர்ந்து கூடுதல் அழகைத் தரும்.
சிலருக்கு முகத்தில் பருக்கள் வந்த தடம், கரும்புள்ளியாக மாறியிருக்கும். இந்தக் கரும்புள்ளிகளை நீக்குவதில் தேன் மிகச்சிறந்த பணியாற்றுகிறது. மேலும், சருமத்தின் நிறத்தை அதிகரிக்கவும் தேன் பயன்படுகிறது. எனவே, தினமும் ஒருமுறை சுத்தமான தேனை முகத்தில் தடவி, சிறிது நேரம் ஊறவிட்டு, குளிர்ந்த நீரால் கழுவினால், கரும்புள்ளிகள் குறையும்.
ஜாதிகாய்த்தூளுடன் சந்தனத்தூளைச் சம அளவில் எடுத்துக்கொண்டு, அதனுடன் சிறிது கஸ்தூரி மஞ்சள்தூள் கலந்து முகத்தில் பேஸ் பேக் போட்டு, 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் குளிர்ந்த நீரால் கழுவவும். இப்படித் தொடர்ந்து செய்தாலும் கரும்புள்ளி காணாமல்போகும்.
சில பெண்களுக்கு முகம் பளிச்சிட்டாலும் கண்கள் சோர்வடைந்து காணப்படும். இது அவர்களின் முக அழகைக் கெடுக்கும். எனவே, கண்களைப் புத்துணர்வுடன் வைத்திருக்க, ஒரு வெண்தாமரையின் இதழ்களை 10 மில்லி விளக்கெண்ணெய்யுடன் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். இதை, காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் இதைக் கண்கள் மீது தடவி, அரை மணி நேரம் கழித்துக் குளிர்ந்த தண்ணீரில் கழுவினால், புத்துணர்ச்சியும் குளிர்ச்சியும் கிடைக்கும்.
மேலும், விளக்கெண்ணெய்யைப் பயன்படுத்தி, வலதுபுறத்திலிருந்து இடதுபுறம், இடதுபுறத்திலிருந்து வலதுபுறம் என கண்களைச் சுற்றி மெதுவாக மசாஜ் செய்தாலும், கண்கள் கோலிக்குண்டாக மிளிர்ந்து கூடுதல் அழகைத் தரும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X