search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான பாகற்காய் காரக் குழம்பு
    X

    சூப்பரான பாகற்காய் காரக் குழம்பு

    சர்க்கரை நோயாளிகள், வயிற்றில் பூச்சி இருப்பவர்கள் அடிக்கடி பாகற்காயை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று பாகற்காய் காரக்குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாகற்காய் - 300 கிராம்,
    வறுத்த வெந்தயப்பொடி - 1/2 டீஸ்பூன்,
    சின்னவெங்காயம் - 200 கிராம்,
    நல்லெண்ணெய் - 50மி.லி.,
    தக்காளி - 2,
    புளி - எலுமிச்சைப்பழ அளவு,
    உப்பு - தேவைக்கு,
    நறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
    தனியாத்தூள் - 1½ டீஸ்பூன்,
    சீரகம் - 1 டீஸ்பூன்,
    தேங்காய்த்துருவல் - 100 கிராம்.




    செய்முறை :

    சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை கரைத்து கொள்ளவும்.

    தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாகற்காயின் விதைகளை நீக்கி பொடியாகவோ அல்லது வட்டமாகவோ நறுக்கிக் கொள்ளவும்.

    சீரகம், தேங்காய்த்துருவல், தக்காளியைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

    கடாயில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் பாகற்காயைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    நன்கு வதங்கியதும் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி வெந்தயப்பொடி, பூண்டு, தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூளைச் சேர்த்து கிளறவும்.

    பின் அரைத்த விழுது, சிறிது தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும்.

    குழம்பு திக்கான பதத்திற்கு வந்ததும், உப்பு, புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விட்டு எண்ணெய் மேலே வந்ததும் இறக்கவும்.

    சூப்பரான பாகற்காய் காரக் குழம்பு ரெடி.

    சூடாக சாதத்துடன் பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×