என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சப்பாத்திக்கு அருமையான எள்ளு மட்டன் கிரேவி
Byமாலை மலர்4 May 2018 6:42 AM GMT (Updated: 4 May 2018 6:42 AM GMT)
தோசை, இட்லி, சாதம், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த எள்ளு மட்டன் கிரேவி. இந்த இந்த கிரேவி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மட்டன் - அரைக் கிலோ
தயிர் - 2 தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
எள் - 2 தேக்கரண்டி
கிராம்பு - 2
முந்திரி - 6,
பட்டை - சிறு துண்டு
வெங்காயம் - 3
தக்காளி - 3
பெருஞ்சீரகம் - ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 8
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 10
எண்ணெய் - தேவையான அளவு
இஞ்சி - சிறிய துண்டு
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
நட்சத்திர மொக்கு - ஒன்று
செய்முறை :
மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
கொத்தமல்லி, 1 தக்காளி, 2 வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
2 தக்காளியை விழுதாக அரைத்து சேர்க்கவும்.
கழுவிய மட்டனில் மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, தயிர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் நன்கு வேக வைக்கவும்.
வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி மிளகு, சீரகம், பெருஞ்சீரகம், எள், பட்டை, கிராம்பு, நட்சத்திர மொக்கு, முந்திரி, சேர்த்து நன்கு வதக்கவும்.
இதனுடன் 1 வெங்காயம், காய்ந்த மிளகாய், பூண்டு, இஞ்சி சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும்.
வதக்கிய அனைத்தும் நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் அதனுடன் ஒரு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய 1 தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள வெங்காய மசாலா கலவை, அரைத்த தக்காளி விழுதை சேர்த்து நன்கு கிளறவும்.
பின்னர் அதனுடன் வேக வைத்த மட்டனை சேர்க்கவும். மட்டன் வேக வைத்த தண்ணீர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதித்த பின்னர் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.
சுவையான எள்ளு மட்டன் கிரேவி தயார்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மட்டன் - அரைக் கிலோ
தயிர் - 2 தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
எள் - 2 தேக்கரண்டி
கிராம்பு - 2
முந்திரி - 6,
பட்டை - சிறு துண்டு
வெங்காயம் - 3
தக்காளி - 3
பெருஞ்சீரகம் - ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 8
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 10
எண்ணெய் - தேவையான அளவு
இஞ்சி - சிறிய துண்டு
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
நட்சத்திர மொக்கு - ஒன்று
செய்முறை :
மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
கொத்தமல்லி, 1 தக்காளி, 2 வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
2 தக்காளியை விழுதாக அரைத்து சேர்க்கவும்.
கழுவிய மட்டனில் மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, தயிர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் நன்கு வேக வைக்கவும்.
வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி மிளகு, சீரகம், பெருஞ்சீரகம், எள், பட்டை, கிராம்பு, நட்சத்திர மொக்கு, முந்திரி, சேர்த்து நன்கு வதக்கவும்.
இதனுடன் 1 வெங்காயம், காய்ந்த மிளகாய், பூண்டு, இஞ்சி சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும்.
வதக்கிய அனைத்தும் நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் அதனுடன் ஒரு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய 1 தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள வெங்காய மசாலா கலவை, அரைத்த தக்காளி விழுதை சேர்த்து நன்கு கிளறவும்.
பின்னர் அதனுடன் வேக வைத்த மட்டனை சேர்க்கவும். மட்டன் வேக வைத்த தண்ணீர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதித்த பின்னர் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.
சுவையான எள்ளு மட்டன் கிரேவி தயார்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X