search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வேர்க்கடலை பக்கோடா செய்வது எப்படி
    X

    வேர்க்கடலை பக்கோடா செய்வது எப்படி

    மாலையில் சூடான டீ, காபியுடன் சாப்பிட வேர்க்கடலை பக்கோடா சூப்பராக இருக்கும். இன்று இந்த பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    காய்ந்த, வறுக்காத வேர்க்கடலை - 200 கிராம்,
    கடலை மாவு - 100 கிராம்,
    அரிசி மாவு - 50 கிராம்,
    [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
    [பாட்டி மசாலா] மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,  
    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு,
    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.



    செய்முறை :

    வேர்க்கடலையுடன் வெண்ணெய், கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயத்தூள், [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள், [பாட்டி மசாலா] மஞ்சள்தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்றாகப் பிசிறி, தண்ணீர் சேர்த்து கெட்டியாகக் பிசைந்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கலவையில் சிறிது எடுத்து உதிர்த்தாற் போல் போட்டு, பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான வேர்க்கடலை பக்கோடா ரெடி.

    குறிப்பு: எண்ணெயில் போட்டு ஒரு நிமிடம் கழித்து கரண்டியால் கிளறினால், ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் தனித்தனியாக நன்றாக வரும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×