என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
மாலை நேர ஸ்நாக்ஸ் பட்டாணி - கோஸ் மசாலா வடை
Byமாலை மலர்16 Jun 2017 7:37 AM GMT (Updated: 16 Jun 2017 7:37 AM GMT)
மாலை நேரத்தில் காபி, டீயுடன் சூடாக சாப்பிட பட்டாணி மசாலா வடை சூப்பராக இருக்கும். இதை செய்வதும் மிகவும் சுலபம். இதன் செய்முறையை இன்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
காய்ந்த பட்டாணிப் பருப்பு - 1 கப்
கடலைப்பருப்பு - அரை கப்
சோம்பு - அரை டேபிள்ஸ்பூன்
கோஸ் - அரை கப்
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - 1 துண்டு
மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை :
* இஞ்சி, வெங்காயம், கொத்தமல்லி, கோஸ், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பட்டாணி மற்றும் கடலைப்பருப்பை தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்கவும். பின் தண்ணீர் வடித்து, பச்சை மிளகாய், அரை டீஸ்பூன் சோம்பு, சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி, கோஸ், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு, மீதியுள்ள சோம்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
* அடி கனமான அடிப்பகுதியுள்ள வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் மிதமான தீயில் வைத்து வாழை இலையில் எண்ணெய் தடவி மாவை வடைகளாகத் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
* சூப்பரான பட்டாணி - கோஸ் மசாலா வடை ரெடி.
* சட்னியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
காய்ந்த பட்டாணிப் பருப்பு - 1 கப்
கடலைப்பருப்பு - அரை கப்
சோம்பு - அரை டேபிள்ஸ்பூன்
கோஸ் - அரை கப்
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - 1 துண்டு
மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை :
* இஞ்சி, வெங்காயம், கொத்தமல்லி, கோஸ், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பட்டாணி மற்றும் கடலைப்பருப்பை தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்கவும். பின் தண்ணீர் வடித்து, பச்சை மிளகாய், அரை டீஸ்பூன் சோம்பு, சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி, கோஸ், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு, மீதியுள்ள சோம்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
* அடி கனமான அடிப்பகுதியுள்ள வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் மிதமான தீயில் வைத்து வாழை இலையில் எண்ணெய் தடவி மாவை வடைகளாகத் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
* சூப்பரான பட்டாணி - கோஸ் மசாலா வடை ரெடி.
* சட்னியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X