என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
பிரண்டை குழம்பு செய்வது எப்படி
Byமாலை மலர்17 May 2018 4:07 AM GMT (Updated: 17 May 2018 4:07 AM GMT)
வயிறு கோளாறு, வாய்வு தொல்லையால் அவதிப்படுபவர்கள் வாரம் இருமுறை பிரண்டையை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று பிரண்டை குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பிரண்டை இளசாக - 1 கப்
புளி - 100 கிராம்,
சின்னவெங்காயம் - 10,
தக்காளி - 1,
பூண்டு - 7 பல்,
சாம்பார்பொடி - தேவைக்கேற்ப,
வெல்லம் - சிறிது,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி,
உளுந்துப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது,
பெருங்காயத்தூள் - சிறிது,
உப்பு - தேவைக்கேற்ப,
வறுத்துப்பொடி செய்ய :
நல்லெண்ணைய் - 1 மேஜைக்கரண்டி,
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்,
தனியா - 2 தேக்கரண்டி,
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது,
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி,
கசகசா - 1/4 தேக்கரண்டி
செய்முறை :
பிரண்டையின் நாரை நீக்கிவிட்டு அலசி பொடியாக நறுக்கவும். நறுக்கிய துண்டுகளை சிறிது நேரம் வெயிலில் வைக்கலாம்.
தக்காளி, வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
புளியை சிறிது நீரில் கரைத்து கொள்ளவும்.
வறுத்து பொடிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் வாணலியில் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வறுத்துப் பொடித்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெந்தயம், உளுந்துப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் பிரண்டையை சேர்த்து வதக்கவும்
தீயைக் குறைத்து 10 நிமிடம் வரை வதக்கவும்.
புளிக்கரைசலில் சாம்பார் பொடி, உப்பு, மஞ்சள் தூள், வறுத்து அரைத்த பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.
பிரண்டை வெந்த பின் வெல்லத்தூள் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பிரண்டை இளசாக - 1 கப்
புளி - 100 கிராம்,
சின்னவெங்காயம் - 10,
தக்காளி - 1,
பூண்டு - 7 பல்,
சாம்பார்பொடி - தேவைக்கேற்ப,
வெல்லம் - சிறிது,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி,
உளுந்துப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது,
பெருங்காயத்தூள் - சிறிது,
உப்பு - தேவைக்கேற்ப,
வறுத்துப்பொடி செய்ய :
நல்லெண்ணைய் - 1 மேஜைக்கரண்டி,
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்,
தனியா - 2 தேக்கரண்டி,
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது,
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி,
கசகசா - 1/4 தேக்கரண்டி
செய்முறை :
பிரண்டையின் நாரை நீக்கிவிட்டு அலசி பொடியாக நறுக்கவும். நறுக்கிய துண்டுகளை சிறிது நேரம் வெயிலில் வைக்கலாம்.
தக்காளி, வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
புளியை சிறிது நீரில் கரைத்து கொள்ளவும்.
வறுத்து பொடிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் வாணலியில் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வறுத்துப் பொடித்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெந்தயம், உளுந்துப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் பிரண்டையை சேர்த்து வதக்கவும்
தீயைக் குறைத்து 10 நிமிடம் வரை வதக்கவும்.
புளிக்கரைசலில் சாம்பார் பொடி, உப்பு, மஞ்சள் தூள், வறுத்து அரைத்த பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.
பிரண்டை வெந்த பின் வெல்லத்தூள் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X