என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சத்தான சுவையான ஸ்நாக்ஸ் கேழ்வரகு சுண்டல்
Byமாலை மலர்28 April 2017 7:33 AM GMT (Updated: 28 April 2017 7:33 AM GMT)
கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. தினமும் உணவில் கேழ்வரகை சேர்த்து கொள்வது நல்லது. இன்று கேழ்வரகில் சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ராகி மாவு (கேழ்வரகு) - அரை கப்,
எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்,
துருவிய தேங்காய் - ஒரு டீஸ்பூன்,
கேரட் - 1 சிறியது,
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - தேவையான அளவு.
உப்பு - தேவையான அளவு.
தாளிக்க:
நெய் - ஒரு டீஸ்பூன்,
வெண்ணெய் - அரை டீஸ்பூன்,
கடுகு, பெருங்காயம் - தேவையான அளவு,
உடைத்த உளுந்தம்பருப்பு - அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை :
* கேரட்டை துருவிக்கொள்ளவும்.
* ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு கப் நீரில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
* ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவை போட்டு அதில் கொதிக்க வைத்த தண்ணீர் தேவையான அளவு ஊற்றி கரண்டியால் மாவை கெட்டியாக கிளறவும். ஆறியதும் கட்டியின்றி பிசைந்துகொள்ளவும்.
* கையில் எண்ணெய் தடவிக்கொண்டு, மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக (பட்டாணி அளவு) உருட்டி, 8 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும்.
* கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.
* அதில் ராகி உருண்டைகளைச் சேர்த்துக் கிளறி, தேங்காய் மற்றும் கேரட் துருவல், எலுமிச்சைச் சாறு பிழிந்து பரிமாறவும்.
* சூப்பரான சத்தான கேழ்வரகு சுண்டல் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
ராகி மாவு (கேழ்வரகு) - அரை கப்,
எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்,
துருவிய தேங்காய் - ஒரு டீஸ்பூன்,
கேரட் - 1 சிறியது,
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - தேவையான அளவு.
உப்பு - தேவையான அளவு.
தாளிக்க:
நெய் - ஒரு டீஸ்பூன்,
வெண்ணெய் - அரை டீஸ்பூன்,
கடுகு, பெருங்காயம் - தேவையான அளவு,
உடைத்த உளுந்தம்பருப்பு - அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை :
* கேரட்டை துருவிக்கொள்ளவும்.
* ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு கப் நீரில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
* ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவை போட்டு அதில் கொதிக்க வைத்த தண்ணீர் தேவையான அளவு ஊற்றி கரண்டியால் மாவை கெட்டியாக கிளறவும். ஆறியதும் கட்டியின்றி பிசைந்துகொள்ளவும்.
* கையில் எண்ணெய் தடவிக்கொண்டு, மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக (பட்டாணி அளவு) உருட்டி, 8 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும்.
* கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.
* அதில் ராகி உருண்டைகளைச் சேர்த்துக் கிளறி, தேங்காய் மற்றும் கேரட் துருவல், எலுமிச்சைச் சாறு பிழிந்து பரிமாறவும்.
* சூப்பரான சத்தான கேழ்வரகு சுண்டல் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X