என் மலர்
நீங்கள் தேடியது "Sundal"
- ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.
- ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.
மஹாளய அமாவாசைக்குப் பிறகு தொடங்கும் நவராத்திரி ஒன்பது நாட்களுக்கு கொண்டாப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.
அதுபோல், ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.
அதன்படி, நவராத்திரியின் மூன்றாவது நாளான இன்று பச்சை பயறு சுண்டல், எலுமிச்சை சாதம் மற்றும் ரவை கேசரி செய்து துர்கைக்கு படைக்கலாம். முதலில், பச்சை பயறு சுண்டல் எப்படி செய்வது என்று பார்ப்போம்..
பச்சை பயறு சுண்டல்:
தேவையான பொருட்கள்:
பச்சை பயறு - 1 கப்
தேங்காய் துருவல் - 1/2 கப்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சில இலைகள்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை
* பச்சை பயறை நன்கு கழுவி, போதுமான தண்ணீர் சேர்த்து 6 முதல் 8 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
* ஊறிய பயறை உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து பிரஷர் குக்கரில் வேக வைக்கவும்.
* வெந்த பச்சை பயறில் உள்ள தண்ணீரை முழுவதுமாக வடித்து, தனியாக வைக்கவும்.
* வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் கடுகு சேர்த்து வெடிக்க விடவும். பிறகு உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
* இப்போது கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
* வடித்து வைத்துள்ள பச்சை பயறை வாணலியில் சேர்த்து நன்கு கிளறவும். கடைசியாக துருவிய தேங்காயை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
எலுமிச்சை சாதம்:
தேவையான பொருட்கள்:
சாதம் - 2 கப் (வேகவைத்து, ஆறவைத்தது)
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1.5 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1.5 டீஸ்பூன்
வேர்க்கடலை - ½ கப்
கறிவேப்பிலை - 1 கொத்து
பச்சை மிளகாய் - 1-2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ¼ டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை - ½

செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
கடுகு வெடித்ததும், வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
பின்னர், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அடுத்து, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், மற்றும் உப்பு சேர்க்கவும்.
அனைத்தையும் கலந்து, அடுப்பை அணைத்துவிட்டு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கிளறவும்.
இந்தக் கலவையை ஆறவைத்த சாதத்துடன் சேர்த்து கிளறி, கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.
நவராத்திரியின் மூன்றாம் நாள் பிரசாதமாக வழங்கலாம்.
ரவை கேசரி
தேவையான பொருட்கள்:
ரவை - 1 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி மற்றும் திராட்சை
சர்க்கரை அல்லது பனை வெல்லம்
தண்ணீர் அல்லது பால்
ஏலக்காய் தூள்

செய்முறை:
* ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு சூடாக்கி, முந்திரி மற்றும் திராட்சையை வறுத்து எடுக்கவும்.
* அதே நெய்யில் ரவையைச் சேர்த்து, நிறம் மாறாமல் நன்றாக வறுக்கவும்.
* தண்ணீரை கொதிக்க வைத்து, வறுத்த ரவையுடன் சிறிது சிறிதாக சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும்.
* ரவை வெந்ததும், சர்க்கரை அல்லது பனை வெல்லத்தைச் சேர்த்து நன்கு கிளறவும்.
* கடைசியாக, வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து பரிமாறலாம்.
- சேலம் மாவட்ட மக்களின் கால நேர சிற்றுண்டி இது.
- டயட்டில் இருப்பவர்களுக்கு இந்த ரெசிபி மிகவும் நல்லது.
தேவையான பொருட்கள்
பச்சை வேர்க்கடலை - 50 கிராம்
வெள்ளை அவல் - 100 கிராம்
வெங்காயம் - 1
ப.மிளகாய் - 3
பூண்டு - 3 பல்
இஞ்சி - சிறிய துண்டு
சிவப்பு மிளகாய் - 4
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - தேவையான அளவு
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்க
எண்ணெய் - சமையலுக்கு
செய்முறை
பூண்டு, இஞ்சி, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அவலை நன்றாக கழுவி சிறிது தண்ணீர் தெளித்து ஊற வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெண் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பச்சை வேர்க்கடலையை போட்டு வதக்கவும்.
அடுத்து அதில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, ப.மிளகாய் போட்டு வதக்கவும்.
அடுத்து மஞ்சள் தூள் சேர்க்கவும்.
வேர்க்கடலை நன்றாக வெந்த பின்னர் ஊறவைத்த அவல், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
அவல் வெந்து உதிரி உதிரியாக வந்தவுடன்கொத்தமல்லி தழை, எலுமிச்சை சாறு பிழிந்து இறக்கி பரிமாறவும்.
இப்போது சூப்பரான சேலம் ஸ்பெஷல் அவல் சுண்டல் ரெடி.
வேர்க்கடலைக்கு பதில், ராஜ்மா, கொண்டைக்கடலை, பச்சை பட்டாணி சேர்த்தும் செய்யலாம். சிவப்பு அவல் வைத்தும் இந்த ரெசிபியை செய்யலாம்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- பாசிப்பருப்பில் அதிக அளவு புரோட்டின், கால்சியம் அடங்கியுள்ளது.
- பாசிப்பயிறு கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகளுக்கு ஏற்ற உணவாகும்.
தேவையான பொருட்கள்
பாசிப் பருப்பு - 1 கப்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப
தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்
பொடி செய்ய:
தனியா- 1 கைப்பிடி
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - சிறிய துண்டு
தாளிக்க:
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 2
செய்முறை
பாசிப் பருப்பை நன்றாக வேக வைத்து கொள்ளவும்.
பொடி செய்ய குடுத்த பொருட்கள் அனைத்தையும் தண்ணீர் சேர்க்காமல் பொடி செய்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பிறகு, வேகவைத்த பாசிப் பருப்பு, மஞ்சள் தூள், உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.
கடைசியாக, பொடி சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி இறக்கவும்.
இப்போது சத்தான ஸ்நாக்ஸ் பாசிப் பருப்பு சுண்டல் ரெடி.
- பச்சை பட்டாணியை தவறாமல் எடுத்துகொள்பவர்களுக்கு வயிற்று புற்றுநோய் வராது.
- பட்டாணியை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு ரத்த சோகை பிரச்சனை ஏற்படாது.
தேவையான பொருட்கள்
பச்சை பட்டாணி - 1 கப்,
கேரட் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்,
தேங்காய்த்துருவல் - 3 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.
தாளிக்க
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
கடுகு - 1 டீஸ்பூன்,
வெள்ளை உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்,
பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்,
வரமிளகாய் - 2, கறிவேப்பிலை - 6 இதழ்கள்.
மேலே தூவுவதற்கு
அரிந்த கொத்தமல்லித்தழை - 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை
பச்சை பட்டாணியை அரை மணி நேரம் ஊற வைத்து உப்பு சேர்த்து குழையாமல் வேக விடவும்.
வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து வெந்த பட்டாணியைச் சேர்த்து வதக்கி கேரட் துருவல், தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
கொத்தமல்லித்தழை தூவி கலந்துவிடவும்.
இப்போது சூப்பரான பட்டாணி கார சுண்டல் ரெடி.
- சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பாஸ்தா என்றால் சாப்பிட அழைக்காமலேயே சாப்பிடுவதற்கு அமர்ந்து விடுவார்கள்.
- பாஸ்தாவில் இன்று சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ரிப்பன் வடிவில் இருக்கும் மேக்ரோனி - ½கப்
மூக்கடலை அல்லது ராஜ்மா (நம் விருப்பத்திகேற்ப) - ½கப்
வெங்காயம் (விருப்பமிருந்தால்) - சிறியது 1
தக்காளி சிறியது - 1
தேங்காய் துருவியது - சிறிதளவு
தாளிக்க கடுகு, உளுந்து, - சிறிதளவு
மிளகாய் (ஃப்ளோக்ஸ்) - 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
கறிவேப்பிலை, கொத்தமல்லி- சிறிதளவு.
செய்முறை
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மூக்கடலை அல்லது ராஜ்மாவை முதல்நாள் இரவே ஊறவைத்து விடவேண்டும். அடுத்தநாள் குக்கரில் சிறிதளவு உப்பு சேர்த்து வேகவைக்க வேண்டும்.
மேக்ரோனியை அகலமான அடி கனமான பாத்திரத்தில் உப்பு மற்றும் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அடி பிடிக்காமல் கிளறிவிட்டு வேகவைத்து அதில் உள்ள நீரை வடித்து விட்டு உடனே குளிர்ந்த நீரில் இரண்டுமுறை அலசினால் அவை ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் தனித்தனியாக இருக்கும்.
இப்பொழுது வானலியில் எண்ணெய் விட்டு கடுகு வெடித்ததும், உ.பருப்பு, கறிவேப்பிலை போட்டு அத்துடன் பெருங்காயத்தூளையும் தூவி சிறிது உ.பருப்பு கலர் மாறியவுடன் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பாதி வதங்கியதுடன் தக்காளியையும் சேர்த்து, அதற்கு தேவையான உப்பையும் சேர்த்து வதக்கவும்.
பின்பு, வேக வைத்த மூக்கடலை அல்லது ராஜ்மாவையும் அத்துடன் மிளகாய் ஃப்ளோக்ஸ் சேர்த்து வதக்கவும்.
கடைசியாக மேக்ரோனியை கலந்து மிகவும் லேசாக கிளறி கொத்தமல்லி தூவி இறக்கலாம்.
கடைசியில் தேங்காய் துருவலையும் சேர்த்து பரிமாறலாம்.
இந்த மேக்ரோனி சுண்டலைக் கட்டாயம் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். மிளகாய் சேர்க்க விரும்பாதவர்கள் மிளகு தூள் சேர்த்தும் சுண்டல் செய்யலாம்.
ராஜ்மா - 1 கப்,
உப்பு - தேவைக்கு,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
எலுமிச்சம் பழம் - 1/2 மூடி,
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
கொத்தமல்லி, புதினா விழுது - 1 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய தக்காளி - 2 டேபிள்ஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 3,
ஆளிவிதைப் பொடி - அரை டீஸ்பூன்

ராஜ்மாவை தண்ணீரில் 12 மணி நேரம் ஊறவைத்து, குக்கரில் வேகவைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, காய்ந்தமிளகாய் தாளித்து, இஞ்சி பூண்டு விழுது, தக்காளி போட்டு வதக்கவும். தக்காளி அதிகம் வதங்கக்கூடாது.
அடுத்து அதில் கொத்தமல்லி, புதினா விழுது, உப்பு சேர்த்து வதக்கவும்.
பின்பு வேக வைத்த ராஜ்மாவை போட்டு கிளறி, எலுமிச்சைச் சாறு பிழிந்து, ஆளிவிதைப் பொடி தூவி பரிமாறவும்.
வெள்ளை கொண்டைக்கடலை, கறுப்பு கொண்டைக்கடலை, காராமணி, பாசிப்பயிறு, கொள்ளு, மொச்சை, சிவப்பு சோயா, ராஜ்மா, காய்ந்த பட்டாணி - தலா 4 டேபிள்ஸ்பூன் அல்லது சமஅளவு,
கடுகு, உளுந்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
பெருங்காயத்தூள் - அரை சிட்டிகை
அரைக்க:
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 4,
இஞ்சி - சிறிய துண்டு.
சோம்பு - கால் டீஸ்பூன்,

செய்முறை:
இஞ்சியை துருவிக்கொள்ளவும்.
தானியங்கள் அனைத்தையும் நன்றாக சுத்தம் செய்து 2 மணிநேரம் ஊறவைத்து ஒன்றாக சேர்த்து சிறிது உப்பு சேர்த்து குக்கரில் போட்டு வேக வைத்து கொள்ளவும்.
அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ளவற்றை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் போட்டு தாளித்த பின்னர் வேகவைத்த தானியம், அரைத்த விழுது சேர்த்துக் கிளறவும்.
பச்சை வாசனை போனதும், இறக்கவும்.
சத்தான சுவையான நவதானிய சுண்டல் ரெடி.
பச்சைப் பயறு - கால் கிலோ
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறிய துண்டு
தேங்காய்த் துருவல் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சைச் சாறு (விரும்பினால்)
தாளிக்க:
எண்ணெய், கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

பச்சைப் பயறை வெறும் கடாயில் போட்டு சிறிது நேரம் வறுத்த பின்னர் தண்ணீரில் ஊறவைக்கவும்.
நீரை வடித்து, புதிதாக அரை கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவைத்து மீண்டும் நீரை ஒட்ட வடிக்கவும்.
தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சுத் துண்டு, உப்பை தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும்.
அடுப்பில் வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெயில் கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
வேகவைத்த பயறு, அரைத்த விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.
விரும்பினால் இறக்கியதும் சில துளிகள் மட்டும் எலுமிச்சைச் சாறு பிழியலாம். இது நாம் தவறுதலாக அதிக உப்போ, காரமோ சேர்த்திருந்தால் சரிசெய்யும். மேலும் மேலும் சாப்பிடும் ஆசையைத் தூண்டும்.






