என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
குழந்தை வளர்ப்பில் பெற்றோர் செய்யும் தவறுகள்
Byமாலை மலர்9 Oct 2018 6:54 AM GMT (Updated: 9 Oct 2018 6:54 AM GMT)
பெற்றோர், தங்களை அறியாமல் குழந்தைவளர்ப்பில் செய்யும் தவறுகளை என்ன என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
குழந்தைகளை ஸ்மார்ட்டாக வளர்க்க வேண்டும் என்ற ஆசை எல்லா பெற்றோருக்கும் உள்ளது. குழந்தையை ஜீனியசாக வளர்ப்பதற்காக பெற்றோர் படும்பாடு வார்த்தைகளுக்குள் அடங்காது. பெற்றோரின் எண்ணங்களை விட இன்றைய குழந்தைகளின் வேகம் அதிகம். நவீன போன்கள், ஆன்லைன் தேடல் எல்லாவற்றிலும் பெற்றோரை விட அதிகம் புரிந்து கொண்டு பயன்படுத்துகின்றனர். பெற்றோர், தங்களை அறியாமல் குழந்தைவளர்ப்பில் செய்யும் தவறுகளை என்ன என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
வீட்டில் ஏற்படும் தண்ணீர்ப் பிரச்னையில் ஆரம்பித்து அலுவலகத்தின் தலைமை அதிகாரி வரை நிறைய சிக்கல்கள் பெற்றோருக்கு இருக்கலாம். “அவன் இருக்கான் பாரு..சரியான தொல்லை புடிச்சவன்”, என்று உங்கள் குழந்தை முன் பேசினால், வார்த்தைகளின் அர்த்தம் அவர்களுக்கு விளங்காவிட்டாலும், அவர்கள் மனதில் பதியும். இதன்மூலம் தவறான உலகத்தை உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் அறிமுகப்படுத்துகிறீர்கள் என்று அர்த்தம். முடித்தவரை, குழந்தைகள் முன் மற்றவர்களையோ அல்லது குடும்ப உறுப்பினர்களைப் பற்றி கடுமையான சொற்களால் விமர்சிக்க வேண்டாம்.
பெற்றோர் பெரும்பாலும் செய்யும் தவறு இது! “என் பையன் கேட்குறதுக்கு முன்னாடியே எல்லாம் வாங்கிக்கொடுத்துடுவேன்”, “என் மகள் அடம்பிடித்ததே இல்லை”, என்று கூறும் பெற்றோர்களா நீங்கள்? ஏனெனில், உங்கள் பிள்ளைகளுக்கு மற்றவர்களிடம் கேட்டு வாங்கும் திறமையை குறைத்துவிடுகிறீர்கள். அவர்கள் கேட்பதற்குமுன் தேவையில்லாததை வாங்கிக்கொடுப்பதற்கு முன், அவர்களுக்கு என்ன தேவை என்பதை அவர்களிடம் கேட்டு, அதை எப்படி நாகரீகமாக கேட்டு வாங்க வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுங்கள்.
இன்றைய பொருளாதாரச் சுழலில், பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்லவேண்டியுள்ளது. அதனால், வேலை நாட்களில் குழந்தைகளுடன் போதுமான நேரத்தைச் செலவழிக்க முடியாமல் இருக்கலாம். அதைப் போக்க வாரநாட்களை எடுத்துக்கொள்ளுங்கள். வார நாட்களில் குழந்தைகளுக்காக தனியாக நேரத்தை செலவிடுங்கள். அந்த நேரத்தில் போன், லேப்டாப், டிவி போன்றவற்றின் பக்கம் தலை சாய்க்காமல் இருங்கள். அவர்களைப் பேசவிட்டு நீங்கள் ரசித்தாலே ஆனந்தமாவார்கள் குழந்தைகள்.
வீட்டில் ஏற்படும் தண்ணீர்ப் பிரச்னையில் ஆரம்பித்து அலுவலகத்தின் தலைமை அதிகாரி வரை நிறைய சிக்கல்கள் பெற்றோருக்கு இருக்கலாம். “அவன் இருக்கான் பாரு..சரியான தொல்லை புடிச்சவன்”, என்று உங்கள் குழந்தை முன் பேசினால், வார்த்தைகளின் அர்த்தம் அவர்களுக்கு விளங்காவிட்டாலும், அவர்கள் மனதில் பதியும். இதன்மூலம் தவறான உலகத்தை உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் அறிமுகப்படுத்துகிறீர்கள் என்று அர்த்தம். முடித்தவரை, குழந்தைகள் முன் மற்றவர்களையோ அல்லது குடும்ப உறுப்பினர்களைப் பற்றி கடுமையான சொற்களால் விமர்சிக்க வேண்டாம்.
பெற்றோர் பெரும்பாலும் செய்யும் தவறு இது! “என் பையன் கேட்குறதுக்கு முன்னாடியே எல்லாம் வாங்கிக்கொடுத்துடுவேன்”, “என் மகள் அடம்பிடித்ததே இல்லை”, என்று கூறும் பெற்றோர்களா நீங்கள்? ஏனெனில், உங்கள் பிள்ளைகளுக்கு மற்றவர்களிடம் கேட்டு வாங்கும் திறமையை குறைத்துவிடுகிறீர்கள். அவர்கள் கேட்பதற்குமுன் தேவையில்லாததை வாங்கிக்கொடுப்பதற்கு முன், அவர்களுக்கு என்ன தேவை என்பதை அவர்களிடம் கேட்டு, அதை எப்படி நாகரீகமாக கேட்டு வாங்க வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுங்கள்.
இன்றைய பொருளாதாரச் சுழலில், பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்லவேண்டியுள்ளது. அதனால், வேலை நாட்களில் குழந்தைகளுடன் போதுமான நேரத்தைச் செலவழிக்க முடியாமல் இருக்கலாம். அதைப் போக்க வாரநாட்களை எடுத்துக்கொள்ளுங்கள். வார நாட்களில் குழந்தைகளுக்காக தனியாக நேரத்தை செலவிடுங்கள். அந்த நேரத்தில் போன், லேப்டாப், டிவி போன்றவற்றின் பக்கம் தலை சாய்க்காமல் இருங்கள். அவர்களைப் பேசவிட்டு நீங்கள் ரசித்தாலே ஆனந்தமாவார்கள் குழந்தைகள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X