search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிறுபாக்கம் அருகே ஆண்டவர் கோவில் தேரோட்டம்
    X

    சிறுபாக்கம் அருகே ஆண்டவர் கோவில் தேரோட்டம்

    சிறுபாக்கம் அருகே ஆண்டவர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    சிறுபாக்கம் அருகே உள்ள பொயனப்பாடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஆண்டவர், செல்லியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து சாமிக்கு சிறப்பு பூஜைகள், திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலையில் சாமிக்கு பால், தயிர், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் சிறப்பு அலங்காரத்தில் ஆண்டவர் மற்றும் செல்லியம்மன் ஆகிய சாமிகள் எழுந்தருளினர். இதையடுத்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரானது கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. பின்னர் சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×