என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஆதிகேசவ பெருமாள் கோவில் தேரோட்டம்
Byமாலை மலர்20 May 2019 5:55 AM GMT (Updated: 20 May 2019 5:55 AM GMT)
காட்டுப்பரூர் ஆதிகேசவ பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
விருத்தாசலம் அருகே காட்டுப்பரூரில் பிரசித்திபெற்ற ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் தேர் திருவிழா நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான தேர் திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனை தொடர்ந்து தினமும் காலையில் ஆதிகேசவ பெருமாளுக்கு சிறப்பி அபிஷேகமும், இரவில் சாமி வீதி உலாவும் நடைபெற்று வந்தது. சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாண உற்சவம் கடந்த 17-ந் தேதி இரவு நடந்தது.
விழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் ஆதிகேசவ பெருமாளுக்கும், வேதவல்லி நாச்சியாருக்கும் பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
இதனை தொடர்ந்து ஆதிகேசவ பெருமாள் மற்றும் வேதவல்லி நாச்சியார் ஆகியோர் கோவில் முன்பு அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்த தேரில் எழுந்தருளினர். பின்னர் சாமிகளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு கூடியிருந்த பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். கோவில் முன்பு இருந்து புறப்பட்ட தேர், முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. இன்று(திங்கட்கிழமை) இரவு தீர்த்தவாரி நடக்கிறது.
இதனை தொடர்ந்து தினமும் காலையில் ஆதிகேசவ பெருமாளுக்கு சிறப்பி அபிஷேகமும், இரவில் சாமி வீதி உலாவும் நடைபெற்று வந்தது. சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாண உற்சவம் கடந்த 17-ந் தேதி இரவு நடந்தது.
விழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் ஆதிகேசவ பெருமாளுக்கும், வேதவல்லி நாச்சியாருக்கும் பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
இதனை தொடர்ந்து ஆதிகேசவ பெருமாள் மற்றும் வேதவல்லி நாச்சியார் ஆகியோர் கோவில் முன்பு அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்த தேரில் எழுந்தருளினர். பின்னர் சாமிகளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு கூடியிருந்த பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். கோவில் முன்பு இருந்து புறப்பட்ட தேர், முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. இன்று(திங்கட்கிழமை) இரவு தீர்த்தவாரி நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X